2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட உரிமம் பெற்ற நிதிக் கம்பனியொன்றான ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட், 2008 முதல் திரவத்தன்மை நெருக்கடியினை எதிர்கொண்டிருந்தது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தமது பணத்தினை மீளப்பெற முடியாதுள்ளனர். வேறுபட்ட உபாயங்களூடாக கம்பனிக்கு புத்துயிரளிப்பதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமையினைத் தொடர்வது வைப்பாளர்களின் நலவுரித்துக்களுக்கும் கம்பனியின் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும் கெடுதலை உருவாக்கும்.
ஆகவே, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2018 யூலை 25 தொடக்கம் செயற்படத்தக்கவாறு 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட் நிறுவனமானது 2018 யூலை 25 முதல் செயற்படத்தக்கவாறு 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் நிதி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படாது.