பிரதேச அலுவலகங்கள்
வங்கித்தொழில் துறையின் உதவியுடன் குறிப்பிட்ட பிரதேசத்தின் உற்பத்தியாக்க மூலவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஊக்குவிப்புக்களையும் தூண்டுதல்களையும் வழங்கும் நோக்குடன் 1981 மாச்சில் மாத்தறையில் இலங்கை மத்திய வங்கியின் முதலாவது பிரதேச அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதேச அலுவலகங்கள் அனுராதபுரத்திலும் மாத்தளையிலும் முறையே 1982 மாச்சிலும் 1985 திசெம்பரிலும் திறந்து வைக்கப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை உயர்த்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நான்காவது பிரதேச அலுவலகம் யாழ்ப்பாணத்தில் 2010 யூலையிலும் ஐந்தாவது பிரதேச அலுவலகம் திருகோணமலையில் 2010 நவெம்பரிலும் ஆறாவது பிரதேச அலுவலகம் கிளிநொச்சியில் 2015 மேயிலும் திறந்து வைக்கப்பட்டன.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டத் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேம நிதிய பணிகளை வழங்குவதற்காக நுவரெலியாவில் 2016 சனவரியில் ஏழாவது பிரதேச அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
எனினும், 2017ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பிரதேச அலுவலகமானது கிளிநொச்சி பிரதேச அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதுடன் பிரதேச அலுவலகங்களின் எண்ணிக்கை தற்பொழுது ஆறாகக் காணப்படுகின்றது.
மத்திய வங்கி நடைவடிக்கைகளுக்காக, வலுவான பிரதேச பிரசன்னத்தினை பேணி வருகின்றமையின் மூலம் மத்திய வங்கியின் குறிக்கோள்களை எய்துவதற்கு பிரதேச அலுவலகங்கள் பங்களிக்கின்றன.
பிரதேச அலுவலகங்களின் தொழிற்பாட்டுப் பிரதேசங்கள்
1. பிரதேச அலுவலகம் - மாத்தறை
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள்
2. பிரதேச அலுவலகம் - அநுராதபுரம்
அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்கள்
3. பிரதேச அலுவலகம் - மாத்தளை
கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்கள்
4. பிரதேச அலுவலகம் - திருகோணமலை
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்
5. பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்கள்
6. பிரதேச அலுவலகம் - நுவரெலியா
நுவரெலியா, மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்கள்
மேலும், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் நிதியியல் வசதிக்குட்படுத்தலை திணைக்களத்திற்கு கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
குறிக்கோள்கள்
நிதியியல் உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிக்கின்றதும் ஏற்றத்தாழ்வற்ற அணுகுதல்களையும் பொறுப்பு வாய்ந்த பயன்பாட்டினையும் பிரதேச மட்டத்தில் தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்காக தரமான நிதியியல் பணிகள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துகின்றதுமான நிதியியல் வசதிக்குட்படுத்தல் சூழலை பேணி வளர்ப்பதன் மூலம் இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்துடன் இசைந்துசெல்லும் விதத்தில் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவித்தல்.
இலங்கையர்களின் நிதியியல் நடத்தையினையும் நிதியியல் இயலாற்றலையும் மேம்படுத்துகின்ற குறிக்கோளுடன் நிதியியல் தகவல்களுடன்கூடிய தாக்குப்பிடிக்கும்தன்மை கொண்ட சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதற்காக, பிரதேச மட்டத்தில் நிதியியல் அறிவு வழிகாட்டலுக்கிணங்க நிதியியல் அறிவு முன்னெடுப்புக்களை நடைமுறைப்படுத்தல்.
இலங்கை மத்திய வங்கியின் பிரதேச பிரசன்னத்தினை பேணுகின்ற அதேவேளையில் பின்தங்கிய வகுப்பினர் தமது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த உதவியளிப்பதுடன் பிரதேச ஏற்றத்தாழ்வுகளையும் சமமற்ற தன்மையினையும் குறைப்பதற்கும் பங்களித்தல்
பிரதேச அலுவலகங்களின் தொழிற்பாடுகள்
பிரதேச சமூகங்களுக்கிடையே சென்றடைவை விரிவுபடுத்துவதற்கும் விழிப்புணர்வு மட்டத்தினை அதிகரிப்பதற்கும் நிதியியல் அறிவு நிகழ்ச்;சித்திட்டங்களை நடாத்தி, நிதியியல் அறிவுமிக்க மற்றும் நிதியியல் அறிவிற்கும் நிதியியல் வசதிக்குட்படுத்துகின்ற இலங்கைக்கு பங்களித்தல்.
பாடசாலைப் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், வங்கித்தொழில் தொழில்சார் நிபுணர்கள், அரச மற்றும் தனியார் துறை அலுவலர்கள் மற்றும் ஆயுதப் படையினர் மற்றும் பொலிசார் உட்பட இலக்கிடப்பட்ட குழுவினரிடையே நிதியியல் அறிவினை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட நிதியியல் அறிவு முன்னெடுப்புக்களை நடைமுறைப்படுத்தல்.
பிரதேசங்களுக்கிடையே வலுவானதும் நன்கு இணைக்கப்பட்டதுமான ஆர்வலர்களின் ஈடுபாடுகளை நிறுவுதல்.
இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் புரிந்துணர்வை அதிகரிக்கின்ற வேளையில் அதன் வர்த்தகநாம பிரசன்னத்தையும் கீர்த்தியையும் வலுப்படுத்தல்.
இலங்கை மத்திய வங்கியின் திணைக்களங்கள் பிரதேச மட்டத்தில் அவற்றின் தொழிற்பாடுகளைக் கொண்டு நடத்துவதற்கு ஆதரவளித்தல்.








