Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில், 2025 யூலை 05ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி மீதான தீர்மான நடவடிக்கையை நிறைவேற்றுதல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் அதன் கீழ் விடுக்கப்பட்ட பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் தொடர்ச்சியாக மீறி மறுத்து வந்திருக்கின்றது. மேலும், நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் போதுமானதற்ற மூலதன மட்டம், சொத்துக்களின் மோசமான தரம், தொடர்ச்சியான இழப்புக்கள் மற்றும் கோருகின்றமை அல்லது முதிர்ச்சியடைகின்றமை போன்ற சந்தர்ப்பங்களில் வைப்பாளர்களின் பணத்தினை மீளச் செலுத்தத் தவறுதல் போன்ற காரணங்களினால் திருப்திகரமானதாக காணப்படவில்லை.

நிதியியல் அறிவினைக் கொண்ட தேமொன்றை கட்டியெழுப்புவதை நோக்கி நிலைமாறுகின்ற நிதியியல் அறிவுசார் முன்முயற்சிகளை மத்திய வங்கி அங்குரார்ப்பணம் செய்துள்ளது

நிதியியல் அறிவினைக் கொண்ட இலங்கை” என்ற பரந்தளவிலான தொலைநோக்கை கட்டியெழுப்புவதுடன் அணிசேர்ந்து, நிதியியல் அறிவு பற்றிய வழிகாட்டலின் கீழ் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளை அங்குரார்ப்பணம் செய்வதன் மூலம், மத்திய வங்கி 2025 யூலை 3 அன்று அதன் நிதியியல் வசதிக்குட்படுத்தல் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைற்கல்லை அடைந்துள்ளது. ஆற்றல்வாய்ந்த நிதியியல் தீர்மானத்தை மேற்கொள்ளுதல் மற்றும் நிலைபெறத்தக்க பொருளாதார நலனோன்புகை போன்றவற்றுக்காக பொதுமக்களின் நிதியியல் நடத்தையை மாற்றும் வகையில் அறிவு, திறன்கள், மற்றும் எண்ணப்பாங்குடன் அவர்களை வலுவூட்டுவதற்கான மத்திய வங்கியின் அர்ப்பணிப்பினை இம்முன்னெடுப்புக்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்கின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது இலங்கையுடனான 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்து, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 350 மில்லியன்) தொகைக்கான உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்குகின்றது. இது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கை பெற்றுக்கொள்கின்ற ஐந்தாவது தொகுதியாக காணப்படுவதுடன், இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பன்னாட்டு நாணய நிதிய நிதியியல் ஆதரவினை சிஎஉ 1.27 பில்லியனிற்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.74 பில்லியன்) அதிகரிக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 யூலை 03 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 மே

நடைமுறைக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த மிகையொன்றுடன் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 மேயில் மேலும் வலுவடைந்தது. தொழிலாளர் பணவனுப்பல்களின் ஆரோக்கியமான உட்பாய்ச்சல்கள் பதிவுசெய்யப்பட்டு, விரிவடைந்து செல்கின்ற வர்த்தகப் பற்றாக்குறையொன்றினை எதிரீடு செய்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூனில் மேலும் தளர்வடைகின்றது

2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது. 

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்