திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான ஐந்தாவது மீளாய்விற்காக 2025 செத்தெம்பர் 24 தொடக்கம் ஒத்தோபர் 9 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வு குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை எட்டியதையடுத்து பன்னாட்டு நாணய நிதியமானது பின்வரும் ஊடக வெளியீட்டினை 2025 ஒத்தோபர் 09 அன்று வெளியிட்டதுடன், இதனைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.