இலங்கை மத்திய வங்கி அதன் மூன்றாம் சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையினை 2025 யூலை 31ஆம் திகதி வெளியிட்டது. நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீத முறையினால் ஆதரவளிக்கப்பட்டு, நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலின் கீழ் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய வங்கி மேற்கொண்ட நாணய தொழிற்பாடுகளையும் செலாவணி தொழிற்பாடுகளையும் பற்றி ஆர்வலர்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துவது சந்தைத் தொழிற்பாடுகள் அறிக்கையின் இலக்காகும்.