Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூலையில் தொடர்ந்தும் மிதமடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்துடன் பணச்சுருக்க நிலைமைகள் 2025 யூலையில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதத்திற்கும் தளர்வடைந்தது, 2025 யூனின் 0.6 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் கொண்ட சிறிய முதன்மைப் பணவீக்கத்தைப் பதிவுசெய்தது

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 யூன்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தபோதிலும் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 முதலரைப்பகுதியில் வலுவடைந்து நடைமுறைக் கணக்கில் மிகையொன்றினைப் பதிவுசெய்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2025 யூனில் தொடர்ந்தும் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 யூனில் 58.6 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் காண்பித்தது. இவ்வளர்ச்சிக்கு சாதகமான தொழில்துறை நிலைமைகள் குறிப்பாக கருத்திட்டப் பணியில் வெளிக்காட்டப்பட்ட நிலையான அதிகரிப்பு மற்றும் நிலையான விலைமட்டங்கள் என்பன பல நிறுவனங்களுக்குக் காரணமாக அமைந்தது. 

இலங்கை மத்திய வங்கி தம்புள்ளையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கி, அதன் 2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின்  தொடராக  2025 ஓகத்து 1 ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.00 மணி வரை தம்புள்ளை பிராந்தியத்தில் தம்புள்ளை விஷேட பொருளாதார மையத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பினை முன்னெடுக்கவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். பி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய அலுவலர்கள் கலந்துகொள்கிறார்கள்.  

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்துள்ளனர்

இலங்கை அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களானவை சிறப்பாகச் செயலாற்றுகின்ற வளர்ச்சி, பணவீக்கம் இலக்கினை நோக்கி முன்னேற்றமடைதல், வெளிநாட்டு ஒதுக்குகளைத் திரட்டுதல் மற்றும் இறை வருவாய்கள் மேம்படுதல் என்பவற்றுடன் பயனளிக்கின்றன.

வர்த்தகக் கொள்கையின் நிச்சயமற்றதன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மீட்சியினை அடைவதற்கும் அதிர்வுகளுக்கான இலங்கையின் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பு உத்வேகத்தை நிலைநாட்டுதல் இன்றியமையாததாகும்.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்