கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், 52.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. 2022 சனவரி தொடக்கம் முதற்தடவையாக நடுநிலையான அடிப்படை அளவினை இச்சுட்டெண் விஞ்சிச்சென்றமையை இது அடையாளப்படுத்துகின்றது. மாதகாலப்பகுதியில் புதிய கட்டடவாக்கப் பணி படிப்படியாகக் கிடைக்கப்பெறுகின்றமையாக இருக்கின்ற அதேவேளை, இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் மீளத்தொடங்கப்பட்டன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.