இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையானது 2026 மே 25 அன்று அமுலுக்கு வரும் வகையில், தங்கத்தால் பிணையுறுதியளிக்கப்பட்ட கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்சமொன்றை அறிமுகப்படுத்தவும் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கொடுகடன் வசதிகளுக்கு பெறுமதிக்கான கடன் உச்ச வரம்புகளை இறுக்கப்படுத்தவும் தீர்மானித்தது. இலங்கை மத்திய வங்கியானது தனது பேரண்ட முன்மதியுடைய அதிகாரத்தின் கீழ், முன்மதியுடைய கடன் வழங்கல் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், நிதி நிறுவனங்களின் தாக்குப்பிடிக்கும்தன்மையை பேணிப்பாதுகாப்பதற்கும், மற்றும் முறைமையியல் ரீதியான பாதிக்கப்படும்தன்மைகள் கட்டியெழுப்பப்படும் சாத்தியப்பாட்டினை குறைப்பதற்குமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
















