Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2024 சனவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 சனவரியில் தயாரித்தல் மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டின.

தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரித்தல்), 2024 சனவாியில் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

பணிகளுக்கான இலங்கை கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண்2 மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்களின் நியமனம்

 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகம் மற்றும் அலுவல்களின் முகாமைத்துவம் என்பனவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்புக்களைக் கொண்ட சபையாகவும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபையாகவும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆளுகைச் சபை

 ஆளுகைச் சபையானது ஆளுகைச் சபையின் தலைவராகச் செயலாற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திரு. ஏ. என் பொன்சேகா (2022.07.27 இலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக இருந்த இவர் ஆளுகைச் சபையின் உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றார்) முனைவர். ரவி ரத்னாயக்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்), திரு. அனுஷ்க எஸ் விஜயசிங்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்) மற்றும் திரு. விஷ்  கோவிந்தசாமி (2023.10.26 அன்று நியமிக்கப்பட்டார்) ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது.

மேலும், நாம் இத்தால் திரு. ரஜீவ் அமரசூரிய மற்றும் திரு. மணில் ஜயசிங்க ஆகியோர் ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியத் தருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரக் குறிப்புக்கள் பின்வருமாறு தரப்படுகின்றன.

துணைநில் வசதிகள் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளைத் தளர்த்தல்

திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் துணைநில் வசதிகளை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் பயன்படுத்துவதன் மீது இலங்கை மத்திய வங்கி 2023 சனவரி 16ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, துணைநில் வைப்பு வசதியைப் பெற்றுக்கொள்வது பஞ்சாங்க மாதமொன்றிற்கு உயர்ந்தபட்சம் ஐந்து (05) தடவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, துணைநில் கடன்வழங்கல் வசதியைப் பெறுவது ஏதேனும் வழங்கப்பட்ட நாளொன்றில் ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினதும் நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டின் 90 சதவீதத்திற்கு வரையறுக்கப்பட்டிருந்தது. மத்திய வங்கி மூலம் வழங்கப்படும் ஓரிரவு வசதிகள் மீது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அளவுக்கதிகமாக தங்கியிருப்பதனைக் குறைக்கும் நோக்குடன் உள்நாட்டுப் பணச் சந்தையை குறிப்பாக, அழைப்புப் பணச் சந்தையை மீளச்செயற்படுத்தி உள்ளக சீராக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளை ஊக்குவிப்பதற்கு ஆதரவளித்து இவ்வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும்தன்மையை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் ஐ.அ.டொலர் 150 மில்லியன் தொகையினை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன

நிதியியல் துறை பாதுகாப்புவலை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தினூடாக (Financial Sector Safety Net Strengthening Project) நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை நிதியிடுவதற்கு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அதேவேளை, உலக வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான செயற்றிட்ட உடன்படிக்கையானது செயற்றிட்ட நடைமுறைப்படுத்தல் ஏற்பாடுகளின் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் முகாமைத்துவம்செய்யப்படுகின்ற இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தில் கவனஞ்செலுத்தி இலங்கையின் நிதியியல் துறையின் பாதுகாப்புவலையினை வலுப்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் அபிவிருத்திக் குறிக்கோளாகும். செயற்றிறன்வாய்ந்த வைப்புக் காப்புறுதித் திட்டங்களுக்கான பன்னாட்டு சிறந்த நடவடிக்கைகளுக்கமைவாக இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் நிதியியல் மற்றும் நிறுவனசார் இயலாற்றலை வலுப்படுத்துவதும் இச்செயற்றிட்டத்தின் இலக்காகக் காணப்படுகின்றது.

ஆளும் சபை ஆறு புதிய உதவி ஆளுநர்களை நியமித்துள்ளது

ஆளும் சபை, 2024 சனவரி 19 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் முனைவர். சி. அமரசேகர, திருமதி, டபிள்யூ.ஏ. டில்ருக்ஷினி, முனைவர். பி.கே.ஜி. ஹரிஸ்சந்திர, திருமதி. டி.எஸ்.டபிள்யூ. சமரதுங்க, திருமதி. ஈ.எச். மொஹொட்டி, திருமதி. ஆர்.டீ.ரி. குணசேகர ஆகியோரை 2024 சனவரி 22 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் உதவி ஆளுநர்கள் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது. 

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 திசெம்பர்

ஏற்றுமதி வருவாய்களுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட ஒப்பீட்டளவிலான பாரிய சுருக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு 2023இற்கான வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2010இலிருந்தான மிகவும் தாழ்ந்தளவிலான மட்டத்தினைப் பதிவுசெய்தது.

வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2023 திசெம்பரில் விரிவடைந்தது. இருப்பினும், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் அண்மைக்காலத் தளர்த்தல்களுக்கு மத்தியில் இறக்குமதிகள் தொடர்ந்தும் மிதமடைந்துக் காணப்பட்டன. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 6 பில்லியன் தொகை ஆரோக்கியமான மட்டமொன்றைப் பதிவுசெய்ததுடன் 2021 ஏப்பிறலிலிருந்தான உயர்ந்தளவிலான மாதாந்தப் பெறுமதியை 2023 திசெம்பரில் பதிவுசெய்தது. 

2023ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்கவொரு மீட்சியின் விளைவாக ஐ.அ.டொலர் 2 பில்லியன் தொகையினை விஞ்சிக் காணப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளன.

Pages