உள்ளக மோசடியொன்று பற்றி அண்மையில் வெளிப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி பற்றிய அபிவிருத்திகளை இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினை மேற்கொள்வதற்காக திரு. இவான் பப்பாஜீயோர்ஜியு தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று 2026 மாச்சு 26 தொடக்கம் ஏப்பிறல் 9 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது.
கணிசமான நட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடியைக் கண்டறிந்துள்ளதாக நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியானது இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவித்துள்ளது. இந்த மோசடியால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளோ அல்லது வைப்புக்களோ பாதிக்கப்படவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 பெப்புருவரியில் மிகையொன்றினைப் பதிவுசெய்து, 2025 நவெம்பரிலிருந்து பதிவுசெய்யப்பட்ட போக்கினை விரிவடையச்செய்ததுடன் 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 487 மில்லியன் தொகையிலான ஒன்றுசேர்ந்த மிகையொன்றினைப் பதிவுசெய்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 மாச்சில் உயர்வடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 பெப்புருவரியின் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மாச்சில் 2.2 சதவீதமாகப் பதிவாகியது.
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 பெப்புருவரியில் 70.3 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்தது. முன்னை மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்களவு உயர்வான மட்டத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகமாயினும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை இது எடுத்துக்காட்டுகின்றது. கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிலையான உட்பாய்ச்சல்கள் மற்றும் சாதகமான வானிலை என்பன மூலம் துணையளிக்கப்பட்டு, பெப்புருவரியில் சாதகமான தொழில் துறை நிலைமைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.