Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2025 மே

மாதாந்த நடைமுறைக் கணக்கானது 2025 மே வரையான காலப்பகுதியிலான சகல மாதங்களிலும் மிகைகளைப் பதிவுசெய்தமையானது வெளிநாட்டுத் துறையின் வலுவான செயலாற்றத்தினைப் பிரதிபலித்தது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 மேயுடன் ஒப்பிடுகையில் 2025 மேயில் விரிவடைந்தமையானது வணிகப்பொருள் ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிகளில் ஏற்பட்ட பாரியளவிலானதோர் ஆண்டிற்காண்டு வளர்ச்சியினைப் பிரதிபலித்தது. இருப்பினும், வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது.

 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணச்சுருக்கம் 2025 யூனில் மேலும் தளர்வடைகின்றது

2025 யூனில் பணச்சுருக்கம் தொடர்ந்தும் தளர்வடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணச்சுருக்கமானது மேயின் 0.7 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2025 யூனில் 0.6 சதவீததத்தைப் பதிவுசெய்து, சிறிதளவு குறைவான வீதத்தை எடுத்துக்காட்டியது. 

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2025 மேயில் மீளெழுச்சியடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மேயில் 59.7 சதவீதமாக மீளெழுச்சியடைந்தது. ஏப்பிறலின் பண்டிகை பருவ கால மந்தநிலையிலிருந்து மீண்டு கட்டடவாக்க நடவடிக்கைகள் மேயில் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளன என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

வெளிநாடுகளில் ஆதன முதலீடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்

இலங்கையில் வதிகின்றவர்களிடையே வெளிநாட்டு அசையாச் சொத்தில் முதலீடுகளை (வெளிநாட்டு ஆதன முதலீடுகள்) ஊக்குவிக்கின்ற விளம்பரங்கள் அண்மைக்காலமாக அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதை இலங்கை மத்திய வங்கி அவதானத்தில் கொண்டுள்ளது. அத்தகைய முதலீடுகளுக்கான வெளிநாட்டு நிதியிடலை பெறுவதற்கான வழிகாட்டலையும் இவ்விளம்பரங்கள் வழங்குகின்றன. 

இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை குறித்த மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பன இணை அனுசரணை வழங்குகின்றன

இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றுடன் இணைந்து ‘இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ குறித்து 2025 யூன் 16 அன்று கொழும்பு சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற உயர் மட்டத்திலான மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்கியது. பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான இலங்கையின் மீட்சி குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஆர்வலர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரினை நிகழ்வு ஒன்றிணைத்தது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 மே

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் மேம்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன

Pages

சந்தை அறிவிப்புகள்