இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 யூன் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்க அலுவலர்கள், வர்த்தக சமூகம் அதேபோன்று பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதனை இந்நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொள்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கிகள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் பங்கேற்புடன் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கார் தரிப்பிட வளாகத்தில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை இடம்பெறும்.
















