2025ஆம் ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இவ்வெளியீடானது நிதியியல் சந்தைப் பங்கேற்பாளர்களின் நிதியியல் முறைமை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கை, கருதப்படும் இடர்நேர்வுகளுக்கான மூலாதாரங்கள் மற்றும் அவ் இடர்நேர்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் என்பவற்றை தொகுத்துக்கூறுகின்றது. இவ்வெளியீட்டின் முடிவுகள் பதில் அளித்தவர்களின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் அவை இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதில்லை.