Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய சிரேஷ்ட அலுவலர்களின் பங்கேற்புடன் 2026 யூன் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கி திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. அரசாங்க அலுவலர்கள், வர்த்தக சமூகம் அதேபோன்று பொதுமக்கள் மத்தியில் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதனை இந்நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொள்கின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் வங்கிகள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்களின் பங்கேற்புடன் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கார் தரிப்பிட வளாகத்தில் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை இடம்பெறும். 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 மேயில் சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்;ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), மத்திய கிழக்கில் இடம்பெற்றுவருகின்ற யுத்தத்திற்கு மத்தியில் உள்நாட்டு வலு விலைகளில் ஏற்பட்ட மேல்நோக்கிய சீராக்கங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்து, 2026 மேயில் இலக்கிற்கு மேல் சிறிதளவு காணப்பட்டது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2026 ஏப்பிறலின் 5.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மேயில் 5.5 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2026 ஏப்பிறல்

மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கமானது 2026 ஏப்பிறலில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திலும் பிரதிபலித்தது. வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 சனவரியிலிருந்து மாச்சு வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மிகையுடன் ஒப்பிடுகையில் 2026 ஏப்பிறலில் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பொன்று பதிவுசெய்யப்பட்ட போதிலும் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறை, பணிகள் மிகையிலானதொரு மிதமடைதல் மற்றும் உயர்ந்தளவிலான முதலாந்தர வருமானப் பற்றாக்குறை ஆகியவற்றினால் இது முக்கியமாக உந்தப்பட்டுக் காணப்பட்டது. இதன் விளைவாக, வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு 2026 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதியில் சிறியளவிலான பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 ஏப்பிறலில் சுருக்கமடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு, பிரதானமாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியுடன் தொடர்புபட்ட பருவக்கால மெதுவடைதலின் காரணமாக, 2026 ஏப்பிறலில் 45.7 கொண்ட பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், திட்டமிடப்பட்ட வேலைகளின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலுக்கான சவால்களாக, குறிப்பாக பெற்றோலிய இரசாயனம் அடிப்படையிலான மூலப்பொருட்கள் காரணமாக உள்ளீட்டு பற்றாக்குறைகளையும் மத்திய கிழக்கு மோதலிலிருந்து தோற்றம்பெறுகின்ற அதிகரிக்கின்ற செலவுகளையும் பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனா.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினைப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது நிறைவுசெய்கின்றது

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளினைப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நிறைவுசெய்து, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சிஎஉ 508 மில்லியன் தொகைக்கான (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 695 மில்லியன்) உடனடி அணுகலினை நாட்டிற்கு வழங்கியது.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை அதிகரிக்கின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 100 அடிப்படைப் புள்ளிகளினால் 8.75  சதவீதத்திற்கு அதிகரிப்பதற்குத் தீர்மானித்தது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற நிலைமைகள் மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.  

Pages

சந்தை அறிவிப்புகள்