அரசாங்க நிறுவனங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் என்பவற்றை உள்ளடக்கி மொத்தமாக 86 நிறுவனங்களின் கூட்டிணைப்புடன் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையை இலங்கை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200 நிபுணர்கள் இத்தேசிய பணிக்கு பங்களித்துள்ளனர். இது நாட்டின் மூன்றாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீடாவதுடன் இம்மதிப்பீட்டின் கீழ், நாட்டில் பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025, இடர்நேர்வுகளை அடையாளப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தது. இலங்கை எதிர்கொள்கின்ற மிக முக்கிய பணம் தூயதாக்கல், பயங்கரவாத நிதியளித்தல் மற்றும் ஆயுதப் பெறுக்கத்திற்கு நிதியளித்தல் மீதான தேசிய இடர்நேர்வு மதிப்பீடு – 2024/2025 அறிக்கையானது அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும்தன்மைகள் மற்றும் ஒட்டுமொத்த இடர்நேர்வு என்பவற்றை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது.