Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி - உள்ளக மோசடி

கணிசமான நட்டத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடியைக் கண்டறிந்துள்ளதாக நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சியானது இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவித்துள்ளது. இந்த மோசடியால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகளோ அல்லது வைப்புக்களோ பாதிக்கப்படவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2026 பெப்புருவரி

வெளிநாட்டு நடைமுறைக் கணக்கானது 2026 பெப்புருவரியில் மிகையொன்றினைப் பதிவுசெய்து, 2025 நவெம்பரிலிருந்து பதிவுசெய்யப்பட்ட போக்கினை விரிவடையச்செய்ததுடன் 2026 சனவரி தொடக்கம் பெப்புருவரி வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 487 மில்லியன் தொகையிலான ஒன்றுசேர்ந்த மிகையொன்றினைப் பதிவுசெய்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2026 மாச்சில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2026 மாச்சில் உயர்வடைந்துள்ளது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கம், 2025 பெப்புருவரியின் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2026 மாச்சில் 2.2 சதவீதமாகப் பதிவாகியது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 பெப்புருவரியில் விரிவடைந்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 பெப்புருவரியில் 70.3 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்தது. முன்னை மாதத்தில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்களவு உயர்வான மட்டத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வேகமாயினும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கத்தை இது எடுத்துக்காட்டுகின்றது. கட்டடவாக்கக் கருத்திட்டங்களின் நிலையான உட்பாய்ச்சல்கள் மற்றும் சாதகமான வானிலை என்பன மூலம் துணையளிக்கப்பட்டு, பெப்புருவரியில் சாதகமான தொழில் துறை நிலைமைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு மோதல்களிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு குறிப்பான கவனம்செலுத்தி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீது பரிணமிக்கின்ற அபிவிருத்திகளையும் தோற்றப்பாட்டையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

2025ஆம் ஆண்டின் நிதியியல் துறைச் செயலாற்றம்

வெளிநாட்டு பாதிக்கப்படக்கூடியத்தன்மைகள் தொடர்பில் கரிசனையொன்று காணப்பட்டபோதிலும், 2025இல் உள்நாட்டு பேரண்ட நிதியியல் நிலைமைகள் மேலும் வலுவடைந்து, தொடர்ச்சியான கொடுகடன் விரிவாக்கத்திற்கு ஆதரவளித்தது. 2025இன் இறுதியளவில் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகள் வழங்கிய மொத்த கொடுகடன் அதிகரித்ததனூடாக கொடுகடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்தது. நிதியியல் துறையின் வெளிப்படுத்துகையானது, வலுவான தனியார் துறைக் கொடுகடன் வளர்ச்சியுடன், தனியார் துறையை நோக்கி மேலும் மாற்றமடைந்தமைக்கு மத்தியில் தற்போதைய இறை ஒருங்கமைப்பினைப் பிரதிபலிக்கின்ற வகையில் பொதுத் துறைக்கான வெளிப்படுத்துகை சிறிதளவில் சுருக்கமடைந்தது. அரசாங்கத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்துகை  வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், அது கணிசமானளவிலேயே காணப்படுகின்றது. வங்கித்தொழில்; துறையினது வைப்புகளுக்கான கொடுகடன் விகிதத்தினால் பிரதிபலிக்கப்பட்டவாறு, நிதியியல் இடையீடு உயர்வடைந்தது. 

Pages

சந்தை அறிவிப்புகள்