Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 நவெம்பர்

நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 நவெம்பர்

நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.

இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்தினை மூடுதல்

இலங்கை மத்திய வங்கி 2026 சனவரி 01 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப் படுகடன் திணைக்களத்தை மூடி, பொதுப் படுகடன் திணைக்களத்தின் லங்கா செக்குயர் பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்திற்கு இடமாற்றுவதாக அறிவிக்கின்றது. 

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2025 யூலை தொடக்கம் செத்தெம்பர் வரை அறிக்கையிடல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிர்வாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2024

நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் பாரியளவிலான பங்களிப்பினைத் தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்ற வேளையில் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் முக்கிய பங்களிப்பாளர்களாகத் தொடர்ந்தும் திகழ்கின்றன

நாட்டின் பெயரளவு மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் முக்கிய பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் காணப்பட்டு, 2024இல் 42.4 சதவீத பங்கொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. பணிகள் மற்றும் கைத்தொழில் ஆகிய இரு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்ட வலுவான நடவடிக்கைகளில் மேல் மாகாணத்தின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அதேவேளை, 2024இல் பொருளாதாரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயர்ந்தளவிலான பங்குகளை முறையே வடமேல் (11.5 சதவீதம்) மற்றும் மத்திய (10.7 சதவீதம்) மாகாணங்கள் பதிவுசெய்துள்ளன. மேலும், மத்திய, கிழக்கு, வடமேல், சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்தான பெயரளவு மொ.உ.உற்பத்திகான பங்களிப்புக்கள் 2023 உடன் ஒப்பிடுகையில் 2024இல் அதிகரித்தன.

இலங்கைக்கு அவசரகால நிதியியல் ஆதரவாக ஐ.அ.டொலர் 206 மில்லியன் தொகையினை வழங்குவதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளிக்கின்றது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது துரித நிதியளிப்புச் சாதனத்தின்  கீழ் அவசரகால நிதியளிப்பிற்கு ஒப்புதலளித்து,  பேரழிவுமிக்க டித்வா புயலிலிருந்து எழுகின்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் சிறப்பு எடுப்பனவு உரிமை 150.5 மில்லியனுக்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 206 மில்லியன், ஒதுக்கீட்டின் 26 சதவீதத்திற்கு நிகராக) உடனடி அணுகலை வழங்கியுள்ளது. 2025 திசம்பர் 19 அன்று பன்னாட்டு நாணய நிதியம் பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. பின்வரும் இணைப்பினூடாக அவ்வறிக்கையைப் பார்வையிடலாம்.

Pages

சந்தை அறிவிப்புகள்