பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு
2008ஆம் ஆண்டின் உலகளாவிய நிதியியல் நெருக்கடியானது, ஒரு நிறுவனத்தில் ஏற்படும் அழுத்தம் தொடர்பான நிறுவனங்களுக்கும் தொடர்பான அனைத்துத் துறைகளுக்கும் நியாயாதிக்கங்களையும் கடந்து விரைவாக எங்கும் பரவி முறையியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடும் என்பதனை நிரூபித்திருக்கின்றது. நிதியியல் நெருக்கடியும் அதனுடன் தொடர்பாக பின்னர் ஏற்பட்ட அபிவிருத்திகளும் நுண்பாக முன்மதியுடைய மேற்பார்வை மாத்திரம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை நீடித்து நிலைத்திருக்கச் செய்யப் போதுமானதல்ல என்பதனைக் காட்டின. இதற்கமைய இலங்கை மத்திய வங்கி, நாட்டின் ஒட்டுமொத்த நிதியியல் உறுதிப்பாட்டின் மீதும் பொருண்மிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பரந்த சந்தைகளிலும் பொருளாதாரக் காரணிகளிலும் கவனத்தைச் செலுத்தும் விதத்தில் தனிப்பட்ட நிறுவனங்கள் மட்டத்திலான மேற்பார்வைக்குமப்பால் கவனம் செலுத்தப்படக்கூடிய விதத்தில் கூடியளவிற்குப் பரந்தளவிலான பேரண்ட முன்மதியுடைய அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தினை அங்கீகரித்திருக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் வளர்ச்சியடைந்துவரும் நிறுவன ரீதியான அமைப்பியல்பானது, அனைத்தையுமுள்ளடக்கிய பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புக் கட்டமைப்பினை நிறுவன மயப்படுத்துவது தொடர்பான அதன் கடப்பாட்டினைத் தெளிவாக பிரதிபலிக்கிறது. உலகளாவிய நிதியியல் நெருக்கடி ஏற்படுவதற்கு மிக முன்னமேயே 2006 மேயில், இலங்கை மத்திய வங்கி, மற்றைய விடயங்களுடன் அண்மைய எதிர்காலத்தில் முக்கிய உறுதியற்ற தன்மைகளுக்கு வழிவகுக்கக்கூடிய அல்லது நிதியியல் முறைமையின் சமநிலையற்ற தளம்பல் நிலைமைகளுக்கு வழிவகுக்கத்தக்க இடர்நேர்வுகளையும் பாதிக்கப்படத்தக்க தன்மைகள் இடம்பெறும் பொழுது அத்தகைய நிலைமைகளை அடையாளம் காணும் வேளையில் அத்தகைய உறுதிப்பாடற்ற தன்மைகளுடன் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை விதந்துரைப்பதற்காக அவற்றை மதிப்பிடுகின்ற பரந்தளவு அதிகாரங்களைக் கொண்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு பிரிவொன்றினை ஏற்படுத்தியது. 2006 ஓகத்து பிற்பகுதியில் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பின் மீது தெளிவான பார்வையொன்றினைச் செலுத்தும் நோக்குடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுப் பிரிவு தனியான திணைக்களமாக தரமுயர்த்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புக் கட்டமைப்பு, முறையியல் சார்ந்த இடர்நேர்வின் வேறுபட்ட மூலங்கள் பரந்தளவிற்கு உள்ளடக்கப்படுவதனை உறுதிப்படுத்துமளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. கட்டமைப்பானது, வங்கித்தொழில்/ நிதியியல் அமைப்புக்கள் மற்றும் தரம்சார் தகவல்கள் என்பனவற்றுடன் கூடிய நிதிகளின் பாய்ச்சல், நிதியியல் விலைகள், நாணயத் தரவு, வெளிநாட்டு நிதியியல் தரவு மற்றும் பேரண்டப் பொருளாதாரத் தரவு என்பனவற்றைப் பிரதிபலிக்கும் பரந்தளவிலான தரவுகளின் மீது தங்கியிருக்கிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் பின்வரும் படிவங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன.
(அ) நிதியியல் உறுதிப்பாட்டுக் குறிகாட்டிகள் மற்றும் வரைபடங்கள்
நிதியியல் உறுதிப்பாட்டுக் குறிகாட்டிகள் மற்றும் வரைபடங்கள், அடிப்படை ஆண்டுடன் தொடர்பான நிதியியல் முறைமையிலுள்ள அழுத்தங்களின் தொடர்பான குறிகாட்டிகளைப் பிரசன்னப்படுத்துகின்றன. தற்பொழுது, நான்கு பிரிவுக் குறிகாட்டிகள் காணப்படுகின்றன. அவையாவன, பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டுக் குறிகாட்டி, நிதியியல் சந்தை உறுதிப்பாட்டுக் குறிகாட்டி, வங்கித்தொழில் ஆற்றல் வாய்ந்த தன்மைக் குறிகாட்டி மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் ஆற்றல் வாய்ந்த தன்மைக் குறிகாட்டி என்பனவாகும். இந்நான்கு குறிகாட்டிகளும் நிதியியல் முறைமையின் வெவ்வேறுபட்ட பிரிவுகளிலிருந்தான, அதாவது நிதியியல் சந்தைகள், வங்கித்தொழில் துறை, வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறை மற்றும் பேரண்டப் பொருளாதாரம் என்பனவற்றிலிருந்தான நிதியியல் உறுதிப்பாட்டுடன் தொடர்பான பல்வேறு இடர்நேர்வு/ தளம்பல் காரணிகளில் ஏற்பட்ட சமகால அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், தனியொரு புள்ளிவிபரத்திலுள்ள புள்ளிவிபர ரீதியான திடமான தகவல்கள், மேலே குறிப்பிடப்பட்ட நான்கு பிரிவுகள் ஒவ்வொன்றிலுமுள்ள உறுதிப்பாட்டின் தற்போதைய நிலையினை அளவிடுகின்றன நிதியியல் உறுதிப்பாட்டுக்கு குறிகாட்டியானது பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டுக் குறிகாட்டி, நிதியியல் சந்தைகள் உறுதிப்பாட்டுக் குறிகாட்டி, வங்கித்தொழில் ஆற்றல் வாய்ந்த தன்மை குறிகாட்டி மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் ஆற்றல் வாய்ந்த தன்மைக் குறிகாட்டிகள் என்பனவற்றைப் பயன்படுத்தி பெறப்பட்ட கலப்புக் குறிகாட்டியாகும். நிதியியல் உறுதிப்பாட்டுக் குறிகாட்டியும் நிதியியல் உறுதிப்பாட்டு வரைபடமும் நிதியியல் முறைமையின் ஒட்டுமொத்த உறுதிப்பாட்டு நிலைமையினை எடுத்துக்காட்டுகின்றன. நிதியியல் அழுத்தச் சுட்டெண், நிதியியல் முறைமையில் ஏற்படும் சிரமங்கள் அதன் இடையீட்டு தொழிற்பாட்டை குறைக்கின்ற காலப்பகுதியை இனங்காணும் வகையில் 2020இல் உருவாக்கப்பட்டது. நிதியியல் முறைமையில் அழுத்த அளவை மதிப்பீடு செய்வதற்கு பங்குரிமை மூலதனம், முறிச் சந்தை, வெளிநாட்டுச் செலாவணி சந்தை மற்றும் வங்கித்தொழில் துறை போன்றவற்றிலிருந்து இச்சுட்டெண் குறிகாட்டிகளை கலப்புக்குறிகாட்டியொன்றாக இணைக்கின்றது.
(ஆ) கடன்தீராற்றல் அழுத்தப் பரீட்சிப்பு
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது வங்கித் தொழில் துறை மீதான அரையாண்டு கடன்தீராற்றல் அழுத்தப் பரீட்சிப்பு நடவடிக்கையை நடாத்துகின்றது. இது ஆற்றல்வாய்ந்த மேலிருந்து கீழ் வரையான அழுத்தப் பரீட்சிப்பை வகைப்படுத்துகின்றது. பேஸ்லைன் சூழ்நிலை மற்றும் எட்வர்ஸ் சூழ்நிலை போன்ற இரு அனுமானிக்கப்பட்ட நுண்பாக நிதியியல் சூழ்நிலைகளின் கீழ் வங்கித் தொழில் துறையின் மீளெழுந்தன்மையை மதிப்பீடு செய்வதை நடவடிக்கை உள்ளடக்குகின்றது. அழுத்தப் பரீட்சிப்பு நடவடிக்கையின் பெறுபேறுகள் கிரமமான இடைவெளிகளில் நாணயச் சபைக்கு தொடர்பூட்டப்படுகின்றன.
(இ) இடைத்தொடர்பும் பரவக்கூடிய பகுப்பாய்வும்
இடைத்தொடர்பு மற்றும் பரவக்கூடிய பகுப்பாய்வானது முக்கியமாக வங்கிகளுக்கிடையிலான வெளிப்படுத்துகைகளினூடாக வங்கித்தொழில் முறைமையை நோக்கிய இடர்நேர்வுகள் தொடர்பில் கவனசெலுத்துகின்றதுடன் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் மற்றும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளிடமிருந்து வெளிப்படும் பரவக்கூடிய இடர்நேர்வுகளை மதிப்பிடுகின்ற அதேவேளை மாதிரியில் காணப்படுகின்ற கடன் தீராற்றலையும் திரவத் தன்மை வழிகளையும் காரணிப்படுத்துகின்றது.
(ஈ) திரவத்தன்மை அழுத்தப் பரீட்சிப்பு
நிதியிடல் வெளிப்பாய்ச்சல் அதிர்வுகளைத் தொடர்ந்து, தேறிய காசு நிலுவைகளை அடிப்படையாகக் கொண்டு திரவத்தன்மை இடர்நேர்வுக்கு வங்கிகளின் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையை காசுப் பாய்ச்சல் அழுத்தப் பரீட்சிப்பு மதிப்பிடுகின்றது. திரவத்தன்மை நெருக்கடிகளின் காலப்பகுதியில் வழக்கமாக அவதானிக்கப்பட்ட தீவிரமான திரவத்தன்மை அழுத்தத்தின் கட்டமொன்றை அழுத்த நிகழ்வானது உருவகப்படுத்துகின்றது. ஒவ்வொரு முதிர்ச்சி காலப்பகுதிக்கும் திரட்டப்பட்ட எதிர்சமநிலைப்படுத்தல் இயலாற்றலின் வடிவில் ஒவ்வொரு வங்கிகளினதும் திரவத்தன்மை இடர்நேர்வை தாங்கக்கூடிய இயலாற்றலின் உள்ளார்ந்த கருத்தொன்றுக்கு காசுப் பாய்ச்சல் அழுத்த பரீட்சிப்பு அனுமதிக்கின்றது.
(உ) ஒட்டுமொத்த முறைமைசார் இடர்நேர்வு அளவீடு
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது 2017 தொடக்கம் அரையாண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டை நடாத்துகின்றது. ஒட்டுமொத்த முறைமைசார் அளவீடானது நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு சாத்தியமான இடர்நேர்வுகள் மீதான சந்தை பங்கேற்பாளர்கள் கருத்துக்களை அளவிட்டு கண்காணிக்கின்ற முன்னோக்கிய அளவீடாகும். இது ஒட்டுமொத்த ஏதேனும் முறைமைசார் பாதிப்புக்களை உருவாக்குவதை சமிஞ்சைப்படுத்தி உயர்ந்தளவான நிகழ்வொன்றின் சாத்தியப்பாட்டை அறிந்தது. இவ்விடர்நேர்வுகளின் பொருண்மியமாதல், நிதியியல் இடையீட்டு செயன்முறையில் சாத்தியமான குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் நிதியியல் முறைமை உறுதிப்பாடு மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும். மேலும், நிதியியல் முறைமையின் பாதிப்புக்கள் தொடர்பில் பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தின் உள்ளக மதிப்பீடுகளை சரிபார்ப்பதற்கு ஒட்டுமொத்த முறைமைசார் இடர்நேர்வு அளவீடு உதவுகின்றது.
(ஊ) காலமுறையான இடர்நேர்வு மதிப்பீடுகள்
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது நிதியியல் துறையின் இடர்நேர்வுகளை எடுத்துகாட்டுகின்ற காலாண்டு இடர்நேர்வு மதிப்பீட்டை தயாரித்து காலாண்டு அடிப்படையில் நீடிக்கின்றது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு குழுக்களினூடாக நாணயச் சபையின் தகவல்களுக்காக காலாண்டு இடர்நேர்வு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
(எ) நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு
அனைத்து கரிசனைக்குரிய ஆர்வலர்களின் கண்காணிப்பிற்காக நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வை பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது வருடாந்தம் வெளியிடுகின்றது. நிதியியல் முறைமை உறுதிப்பாடு மீளாய்வானது பேரண்ட நிதியியல் நிலைமைகள், நிதியியல் சந்தைகள், நிதியியல் நிறுவனங்கள், நிறுவன மற்றும் வீட்டுத்துறை மற்றும் நிதியியல் உட்கட்டமைப்பு போன்ற ஐந்து பகுதிகளின் கீழ் நிதியியல் முறைமையின் இடர்நேர்வு மற்றும் தாக்கும்பிடிக்கும்தன்மையை பகுப்பாய்வு செய்கின்றது.
(ஏ) வீட்டுத்துறை மற்றும் கம்பனி துறைகளின் பகுப்பாய்வு
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது வீட்டுத்துறையினதும் கம்பனிகள் துறைகளினதும் வெளிப்படுகின்ற நிதியியல் பாதிப்படக்கூடிய தன்மைகளை மதிப்பீடு செய்வதற்கு அவ்விரு துறைகள் தொடர்பில் பகுப்பாய்வை நடாத்துகின்றது. ஆகவே, நிதியல்லா நிறுவனங்களின் பதிலீடொன்றாக செயற்படுகின்ற கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிட்டப்பட்ட நிதியல்லா நிறுவனங்களிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தி, நிதியியல் முறைமைக்கான நிதியல்லா நிறுவனங்களிலிருந்து வெளிப்படுகின்ற இடர்நேர்வுகளை மதிப்பீடு செய்வதற்கு கம்பனிகள் துறையின் பாதிப்படக்கூடிய தன்மைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களமானது அக்கடன்பட்டாளர்களிடமிருந்து வெளிப்படுகின்ற நிதியியல் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை மதிப்பீடு செய்து ஒட்டுமொத்த முறைமைசார் இடர்நேர்வுகளின் சாத்தியமான உருவாக்குதலை இனங்காண்பதற்கு வீட்டுத்துறை மற்றும் நிறுவனம்சார் துறைகளின் கடப்பாடுகளை பகுப்பாய்வு செய்கின்றது. கொடுகடன் தகவல் பணியகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற வங்கிகளினதும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்/சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக் கம்பளினதும் காலாண்டு மொத்த கொடுகடன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.
(ஐ) நிலைபெறத்தக்க விதத்தில் நிதியளித்தல்
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் இலங்கையில் நிலைபெறத்தக்க நிதியளித்தலுக்கான வழிகாட்டலை நடைமுறைப்படுத்தலின் செயலகமாக தொழிற்படுவதுடன் நாட்டில் நிலைபெறத்தக்க நிதியளித்தல் முன்னெடுப்புக்களை ஊக்குவிப்பதில் ஆர்வமுள்ள பல்துறை ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ளது.