நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டுத்துறை மற்றும் உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் ஆகியவற்றில் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடானாது பணவீக்கத்தினை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது.
Published Date:
Wednesday, January 28, 2026








