இலங்கை மத்திய வங்கி இணைந்து நடாத்திய நாணய ஆராய்ச்சியுடன் இணைந்த 10ஆவது ஆசிய பணச் சுழற்சிக் கருத்தரங்கு - 2019 கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் 2019 செத்தெம்பர் 23 - 26 வரை இடம்பெற்றது. பன்னாட்டு வர்த்தக ரீதியான பணத் தொழிற்பாடுகள் கருத்தரங்கு என முறைசார்ந்து அறியப்படுகின்ற பணச் சுழற்சிக் கருத்தரங்கானது வர்த்தக ரீதியான காசு முகாமைத்துவம், விநியோகம் மற்றும் சுற்றோட்டம் என்பனவற்றின் ஆர்வலர்களுக்கான முதன்மை வாய்ந்த உலக நிகழ்வொன்றாகும். 24 வருட அதன் வரலாற்றைக் கொண்ட இக்கருத்தரங்கினை நடாத்திய முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை விளங்குகின்றது.
















