Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையில் மெய்நிகர் நாணயங்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டல்

இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மெய்நிகர் நாணயங்களுக்கு வளர்ந்துவரும் ஆர்வம் பற்றி விழிப்பாக இருக்கின்றது.

'மெய்நிகர் நாணயங்கள்" என்ற சொற்பதமானது தனிப்பட்டரீதியாக விருத்திசெய்பவர்களினால் வெளியிடப்படுகின்ற அவர்களின் சொந்தக் கணக்கின் அலகுகளில் மாற்றம் செய்யப்படுகின்ற டிஜிடல் ரீதியாக உருவாக்கப்பட்ட பெறுமதி வகைக் குறிப்பீடுகளை குறிப்பிடுவதற்குப் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. மெய்நிகர் நாணயங்களின் பொதுவான உதாரணங்கள், எண்ம நாணயம் (Bitcoin), மென் நாணயம் (Litecoin) மற்றும் ஈத்தரம் (Ethereum) போன்ற மறைகுறி நாணயங்களாகும் (Crytocurrenceis). மெய்நிகர் நாணயங்கள் மத்திய வாங்கியினால் வெளியிடப்படும் நாணயங்களல்ல.

இலங்கை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் தொடர்பிலான ஊடக அறிவித்தல்

வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம், 2018 ஏப்பிறல் 12, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரத்தக்க விதத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு அரசியல் யாப்பின் 70ஆம் உறுப்புரைக்கமைவாக சனாதிபதி அவரது அரசியலமைப்பு உரிமையினை பிரயோகித்துள்ளார். அடுத்த பாராளுமன்ற அமர்வு 2018 மே 08 அன்று ஆரம்பிக்கும். இக்காலப்பகுதியின் போது பிரேரணைகள் அல்லது வினாக்கள் எதுவும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படமுடியாது என்பதுடன் பாராளுமன்றம் மூலமான ஏதேனும் முன்கூட்டிய நடவடிக்கைகள் செல்லுபடியானதாகவிருக்கும். பாராளுமன்றத்தினை ஒத்திவைத்தலானது அரசாங்கம் தொழிற்படுவதில் அல்லது இயங்குவதில் தாக்கம் எதனையும் கொண்டிராது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐ.அ.டொலர் 2.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குகிறது.

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சார்பில் 5 ஆண்டுகாலத்திற்கான ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் கொண்ட புதிய முறிகளையும் 10 ஆண்டுகாலத்திற்கான மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் முறிகளையும் முறையே 2023 ஏப்பிறல் 18ஆம் நாள் மற்றும் 2028 ஏப்பிறல் 18ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் சந்தைக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிச் ரேடிங் என்பனவற்றினால் முறையே B1,B+ மற்றும் B+ இல் தரமிடப்பட்டுள்ளன.

​வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - சனவரி 2018

இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு மத்தியிலும் நிதியியல் கணக்கிற்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2018 சனவரியில் மேம்பாடொன்றினை எடுத்துக்காட்டியது. வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்த அதேவேளை இறக்குமதிகள் மீதான செலவினமும் மாதத்தின் போதான ஏற்றுமதி வருவாய்களின் செயலாற்றத்தினை கடந்து கணிசமாக அதிகரித்தது. எவ்வாறு இருப்பினும், கடந்த ஆண்டின் போது அவதானிக்கப்பட்ட மிதமான போக்கினை நேர்மாற்றி சுற்றுலாத்துறை வருவாய்கள் 2018 சனவரியின் போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. 2017இன் போது வேகக்குறைவொன்றினை அடையாளப்படுத்திய தொழிலாளர் பணவனுப்பல்களும் 2018 சனவரியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. அதேவேளை, சென்மதி நிலுவை நிதியியல் கணக்கானது அரசாங்கப் பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றில் வெளிநாட்டு முதலீடுகளுடன் 2018 சனவரியில் உயர்வான உட்பாய்ச்சலொன்றினை தொடர்ந்தும் அனுபவித்தது. 2018 சனவரியின் இறுதியிலுள்ளவாறு, நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.7 பில்லியனாக 4.3 மாதங்கள் இறக்குமதிகளுக்குச் சமமானதாகவிருந்தன.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல.2 - 2018

பணவீக்கம் மற்றும் பணவீக்கத் தோற்றப்பாட்டின் சாதகமான அபிவிருத்திகள் அதேபோன்று உண்மையான மற்றும் உத்தேசிக்கப்பட்ட மொ.உ. உற்பத்தி வளர்ச்சியில் தற்போதுள்ள இடைவெளியினை விரிவடையச் செய்த எதிர்பார்க்கப்பட்டதனை விட தாழ்ந்த உண்மை மொ.உ. உற்பத்தி வளர்ச்சி என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு, நாணயச் சபை 2018 ஏப்பிறல் 03இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீத வீச்சின் மேல் எல்லையான துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் கடந்த அண்மைக் காலத்தில் உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட தளம்பலினைக் குறைவடையச் செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயச் சபையின் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினைக் குறைப்பதற்கான தீர்மானம் பின்வரும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளினை அடிப்படையாகக் கொண்டது:

இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்று சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்