திறைசேரி முறிகளை முதிர்ச்சித் திகதிக்கு முன்னர் அவற்றிற்கான கொடுப்பனவுகளை செலுத்த போதுமான நிதியில்லை என்பதனைக் காட்டும் தவறான ஊடக அறிக்கையினை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கின்றது.
இலங்கை மத்திய வங்கி மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளில் துல்லியமான தன்மையில்லை என்பதனை அவதானித்திருப்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடனைத் தீர்ப்பனவு செய்வதில் அரசாங்கம் அப்பளுக்கற்ற படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுப் பதிவேடுகளைக் கொண்டிருப்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. முதிர்ச்சியில் வட்டியையும் முதல் தொகையினையும் தவணைத் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு செய்யாது, தவணைத் திகதியில் (சரியான நேர கொடுப்பனவு) கொடுப்பனவு செய்வது, அரசாங்கத்தின் சார்பில் பொதுப்படுகடனை முகாமைப்படுத்துகின்ற அதன் முகவர் தொழிற்பாடுகளை ஆற்றும் போது இலங்கை மத்திய வங்கியினால் பின்பற்றப்படுகின்ற விதியாகும்.