Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை அதன் தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறது

இலங்கை மத்திய வங்கி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டுடன் இணைந்து தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவுத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல் கல்லொன்றினை அடைந்திருக்கிறது. தேசிய அட்டைத் திட்டமானது, பன்னாட்டு கொடுப்பனவு அட்டைத் தொழிற்பாட்டாளரான ஜேசிபி யப்பான் இன்ரநஷனலின் பங்கேற்புடன் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும். ஆரம்பத்தில், இவ்வட்டைத் திட்டத்தின் கீழ் பற்று அட்டை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக, காசு மீள பெறுகைகளுக்கு வசதியளிப்பதற்காக, லங்காபே வலையமைப்புடன் நாடளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள 4,800 இற்கு மேற்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறிகளில் தேசிய அட்டைத் திட்ட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும். 

2019 மேயில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)'  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஏப்பிறலின் 3.6 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 3.5 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் 2019 மேயில் முறையே -0.4 சதவீதம் மற்றும் 6.7 சதவீதமாக பதிவாகியது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஏப்பிறலின் 1.9 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது. 

இலங்கையில் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலினை தேசிய ரீதியாக தொடக்கி வைத்தல் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2019 யூன் 19 அன்று தொடக்கி வைத்தது. இது, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றிற்கான தேசிய வெளியீட்டுடன் தொடர்புபட்டதாகும். 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 ஏப்பிறல்

சுருக்கமடைகின்றவர்த்தகப் பற்றாக்குறையினால் ஆதரவளிக்கப்பட்டு வெளிநாட்டுத் துறையானது 2019 ஏப்பிறலில் ஒப்பீட்டளவில் உறுதியானதாகக் காணப்பட்டது.

2019 ஏப்பிறலில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 ஏப்பிறலின் ஐ.அ.டொலர் 999 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 797 மில்லியனுக்குசுருக்கமடைந்தது. 

2019 ஏப்பிறலில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு குறைவு ஏற்பட்டமைக்கு, இறக்குமதிச் செலவினத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 11 சதவீத வீழ்ச்சியும் ஏற்றுமதி வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 0.4 சதவீத சிறிதளவான அதிகரிப்பும் காரணமாக அமைந்தன.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 மே

 2019 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் 50.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மீட்சியடைந்தன. இது 2019 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 9.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் மீட்சிக்கு தயாரிப்பு மற்றும் புதிய கட்டளைகளில், குறிப்பாக, புடவைகளின் தயாரிப்பு, அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான உற்பத்திகள் என்பனவற்றின் உற்பத்திகளிலும் புதிய கட்டளைகளிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, தொழிற்சாலைத் தொழிற்பாடுகளில் மேலதிக நேரங்களைப் பயன்படுத்தி குவிந்திருந்த கட்டளைகள் பூர்த்தி செய்யப்பட்டமையே காரணமாகும். குறிப்பாக, புடவை மற்றும் ஆடைகள் துறையிலுள்ள அநேக பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் நிலுவையிலிருந்த கட்டளைகளை தீர்ப்பனவு செய்வதற்காக தாம் வார நாட்களிலும் அதேபோன்று வார இறுதியிலும் மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.

இலங்கை மத்திய வங்கி விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருதினைப் பெற்றுக் கொள்கிறது

2019 யூன் 11ஆம் நாளன்று தாமரைத் தடாகத் திரையரங்கில் நடைபெற்ற சனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருது இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்த மாபெரும் பணியினை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு இது வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு இலங்கை ரெலிகொம் பிஎல்சி இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

Pages

சந்தை அறிவிப்புகள்