நிதித் துறை மூலம் நாணயக் கொள்கையை துரிதப்படுத்தவும், பொதுவாக கடன் சாதனங்களின் மற்றும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை உரிமம்பெற்ற வங்கிகள் குறைப்பதற்கும் அதனூடாக உண்மைப் பொருளாதாரத்திற்கான கடன் பாய்ச்சலை அதிகரிக்கவும் இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களை வைப்புக்களுக்கான வட்டி வீதங்களை 29.04.2019 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் குறைப்பதற்கு கோரியுள்ளது. அதன்படி உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 3 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியைக் கொண்ட சேமிப்பு வைப்புக்கள் மற்றும் ஏனைய வைப்புக்களுக்கான வட்டி வீதம் துணைநில் வைப்பு வசதி வீதத்துடனும் நீண்ட காலப்பகுதிக்குரியவை 364 நாள் திறைசேரி உண்டியல் வீதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.