Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 07 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2019 நவெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக 2019 நவெம்பர் 26ஆம் திகதி அன்று செய்தித்தாள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில தகவல்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. 

2019 ஒத்தோபரில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 செத்தெம்பரின் 5.0 சதவீதத்திலிருந்து 2019 ஒத்தோபரில் 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்புக்கள் இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்தன. இதன்படி, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 செத்தெம்பரின் 4.9 சதவீதத்திலிருந்து 2019 ஒத்தோபரில் 7.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. எனினும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.3 சதவீதத்தினைப் பதிவுசெய்து 2019 மேயிலிருந்து அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியடைந்து செல்லும் அதன் போக்கினைத் தொடர்ந்தது.

முழுவடிவம்

அதேநேர கணனிவழி ஏமாற்று நடவடிக்கைகள் பற்றி கவனமாயிருங்கள் - உங்கள் வங்கிக் கடவுச்சொற்களையும் தனிப்பட்ட அடையாள இலக்கங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

இலங்கை மத்திய வங்கி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரயோகங்க;டாக பல்வேறு வகையான நிதியியல் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் தொழிற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்களைப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலமாக இவ்வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய ஏமாற்று நடவடிக்கைகளில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கவரதத்தக்க இலகுவான கடன் திட்டங்க;டாக மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய மோசடியான கடன் ஒப்புதல் செய்முறைகளின் போது மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாள இலக்கம் போன்ற வாடிக்கையாளர்களின் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பொதுமக்களை வசீகரித்துக் கொள்வர். அதன் பின்னர் மோசடியாளர்கள் அத்தகைய இரகசியத் தகவல்களை வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளரின் பணத்தினை திருடிக் கொள்வர்.

பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக் கொள்கிறது

சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள், அதனைத் தொடர்ந்து மேதகு சனாதிபதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை மற்றும் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற முக்கிய நியமனங்கள் என்பனவற்றிற்கான சாதகமான சந்தைப் பதிலிறுப்புக்களுக்கு முற்றுமுழுதாக மாறான தன்மையினை எடுத்துக்காட்டும் விதத்தில் “இலங்கையின் தேர்தல் பெறுபேறு கொள்கையின் நிச்சயமற்ற தன்மையினை அதிகரிக்கிறது” என்ற மகுடத்தின் கீழ் 2019 நவெம்பர் 21ஆம் திகதி பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக்கொள்கிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - செத்தெம்பர் 2019

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக 2019 செத்தெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) விரிவடைந்தது. இருப்பினும் கூட, ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் அதிகரித்து இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமையின் விளைவாக 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியினை விட குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாகவே காணப்பட்டது. அதேவேளை, சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 2019 செத்தெம்பரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. 2019 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) உயர்வடைந்த போதும் ஒன்றுசேர்ந்த அடிப்படையில் அது வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கில், 2019 செத்தெம்பரில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தது. செத்தெம்பர் மாத காலப்பகுதியில் சில பெறுமானத் தேய்வு அழுத்தங்கள் காணப்பட்ட போதும் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்