Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்பு உடமையாளர்களுக்கான கொடுப்பனவு

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பில் 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கு மேலதிகமானது. 

வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினை 2018.07.10ஆம் திகதி தொடக்கம் உடனடியாகக் கொடுப்பனவு செய்யுமாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களைத் தற்போதைய மட்டங்களிலேயே பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018 யூலை 5ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் முறையே 7.25 சதவீதமாகவும் 8.50 சதவீதமாகவும் தொடர்ந்தும் காணப்படும். நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதிப்படுத்துவதும் அதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் சாதகமான வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்பதுமான நோக்குடன் இசைந்து செல்லும் வகையில் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2018 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஏப்பிறல் 2018

நடைமுறைக் கணக்கில் கலப்பான செயலாற்றமொன்று எடுத்துக்காட்டப்பட்டமைக்கிடையிலும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட உட்பாய்ச்சல்களின் காரணமாக 2018 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுப்பெற்றது. நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள், குறிப்பாக 12ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வழங்கலின் பெறுகைகள் செயற்றிட்டக் கடன்கள் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிற்கான கடன்கள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 இறுதியில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியன் கொண்ட வரலாற்றிலே மிக உயர்நத் மட்டமொன்றினை அடைவதற்கு வழிவகுத்தன. இறக்குமதிச் செலவினங்கள் உயர்நத் வேகத்தில் அதிகரித்த வேளையில் ஏற்றுமதி வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்தமையின் காரணமாக நடைமுறைக்கணக்கு நியதிகளில், வர்தத்கப் பற்றாக்குறை 2018 ஏப்பிறலில் விரிவடைந்தது. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருவாய்களும் தொழிலாளர் பணவனுப்பல்களும் இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றினைக் கொண்டிருந்தன.

 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் விடுக்கப்பட்ட அறிக்கை

அண்மைய நாட்களில், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களுக்கெதிராக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற முறையில், நான் பணியிலிருந்து வருகின்ற இவ்விரண்டாண்டு காலப்பகுதியில், மிகச் சிறந்த பொருளியலாளரான வீரசிங்க வங்கியின் பணிக்கு வானளாவிய பங்களிப்பினை ஆற்றியிருப்பது பற்றி விதிமுறைசார்ந்த அறிக்கையொன்றினை விடுக்க விரும்புகின்றேன்.

மேலும், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க தமது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்குப் பக்கபலமாக எந்தவொரு சான்றினையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனைக் குறிப்பிடுவதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். 

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் மொத்த உள்நாட்டு உற்பத்தியினைத் தொகுக்கிறது

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளைத் தொகுக்கின்ற ஏக பொறுப்பு 2007 இலிருந்து தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாட்டின் மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை மாற்றியமைப்பதில் இலங்கை மத்திய வங்கி தொடர்புபட்டிருக்கிறது என்ற பொருளில் ஆர்வமுடைய தரப்பினரால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை பற்றி மத்திய வங்கி தனது அவதானிப்பினைச் செலுத்தியிருக்கிறது. இது பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துமொன்றாகும்.

Pages

சந்தை அறிவிப்புகள்