ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பில் 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கு மேலதிகமானது.
வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினை 2018.07.10ஆம் திகதி தொடக்கம் உடனடியாகக் கொடுப்பனவு செய்யுமாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.