Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை கூட்டுறுதி தொடர்மாடிமனை அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை என்பனவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், கூட்டுறுதி தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண வணிகர்கள் தொடர்பில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாததத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய சட்ட ரீதியான கடப்பாடுகள் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கூட்டுறுதி தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையிடமிருந்தும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடமிருந்தும் நிதியியல் உளவறிதல் பிரிவு எதிர்பார்க்கின்றவாறு தகவல்களை வழங்குதல் மற்றும் ஆதரவுத் தன்மையினை வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பான செயன்முறைகளை மேலோட்டமாக அவற்றிற்குத் தெரிவிக்கும் விதத்தில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையுடனும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் 2019 ஓகத்து 28ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டது.

காணி விலைச் சுட்டெண் - 2019 முதலரையாண்டு

இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படுகின்ற கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 2018இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்து 2019 முதல் அரையாண்டின் போது 132.2 சுட்டெண்களை அடைந்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணை விலைச் சுட்டெண்களான அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைச் சுட்டெண்கள் இவ்வதிகரிப்பிற்கு பங்களிப்புச் செய்தன. 

கைத்தொழில் காணி விலைச் சுட்டெண்ணானது 14.9 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு அதிகூடிய அதிகரிப்பினை பதிவு செய்த அதேவேளைஇ வர்த்தக காணி விலைச் சுட்டெண் மற்றும் வதிவிடக் காணி விலைச் சுட்டெண் என்பன முறையே 13.2 சதவீதத்தினாலும் 12.8 சதவீதத்தினாலும் அதிகரித்தன. அதேவேளைஇ 2018இன் 2ஆம் அரைப் பகுதியிலிருந்து 2019 முதலாம் அரைப் பகுதி வரை காணி விலைச் சுட்டெண் 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

முழுவடிவம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை குறைத்திருக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 ஓகத்து 22ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் 8.00 சதவீதமாக குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. நாணயச் சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கம் மற்றும் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் சிறந்த முறையில் நிலைப்படுத்தப்பட்ட நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடு காணப்படும் சூழலில் பொருளாதாரச் செயற்பாடுகளின் மீளெழுச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

2019 யூலையில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூனின் 2.1 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 2.2 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் விலைகளிலான மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. அதேவேளை, 2019 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே -2.5 சதவீதத்தினையும் 6.1 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 யூனின் 2.0 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 1.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை தாய் நாட்டிற்கு வழங்கியமைக்காக புகழ்பெற்ற ஆளுமைமிக்கவர்களுக்கான 'தேசிய கௌரவம்" அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2019 ஓகத்து 19ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடன் மேலும் ஐந்து ஆளுமைமிக்கவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

'தேசமான்ய" என்பது குடியியல் கௌரவமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாவது அதியுயர்வான தேசிய கௌரவமாகும். இது தேசத்திற்கு வழங்கிய உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை அடையாளப்படுத்தி வழங்கப்படுகின்றது.

வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூன்

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சுருக்கத்தின் காரணமாக 2019 யூனில் வெளிநாட்டுத் துறை மேலும் வலுவடைந்த வேளையில் நாட்டிற்கான இரு பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்தான பெறுகைகளின் காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பெருமளவிற்கு அதிகரித்தன.   

2019 யூனில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 316 மில்லியன்களுக்கு குறுக்கமடைந்தது. இது, 2010 ஒத்தோபருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்ததொரு அளவாகும்.

இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 23.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் ஏற்றுமதி வருவாய்கள் 5.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தமையுமே காரணமாகும். 

Pages

சந்தை அறிவிப்புகள்