நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்திவைத்தலை இரத்துச்செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் மற்றும் 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் என்பனவற்றின் நியதிகளுக்கமைய செயற்பட்டு, 2019.11.30ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினை மற்றும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்தி வைத்தலை இரத்துச்செய்ய தீர்மானித்துள்ளது.

Published Date: 

Friday, November 29, 2019