எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.
இலங்கை மத்திய வங்கி அதன் தற்போதைய எறிவுகளின் அடிப்படையில், சந்தை வட்டி வீதங்களில் அண்மைக் காலத்தில் அதிகரிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதனை வலியுறுத்துகிறது. முதன்மைப் பணவீக்கம், மையப் பணவீக்கம், பணவீக்க எதிர்பார்ப்புக்கள், விரிந்த பணத்தின் வளர்ச்சி, கொடுகடன் விரிவாக்கம், பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கம் அதேபோன்று பன்னாட்டு ஒதுக்கு நிலைமை என்பன வட்டி வீதங்களில் அதிகரிப்பொன்றினை எதிர்பார்ப்பதற்கான பகுத்தறிவுச் சந்தையொன்றினை நியாயப்படுத்துவனவாக இருக்காது.