Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்கு ஒரு கருமபீடத்தினை திறத்தல்

2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது. 

இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். 

நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். இக்கருமபீடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரு தனிநபரினால் பெற்றுக்கொள்ளக்கூடிய ரூ.1/=,ரூ.2/=, ரூ.5/=, ரூ.10/= போன்ற ஏதாகிலும் முகப்பெறுமதியிலிருந்து உயர்ந்தபட்சப் பெறுமதி ரூ.20,000 ஆகும். 

2019 பெப்புருவரியில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100)  ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் தளத்தாக்கத்தின் பிரதானமான காரணத்தினால் 2019 சனவரியின் 1.2 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 2.4 சதவீதமாக அதிகரித்தது. இதேவேளையில், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது 2019 சனவரியின் 6.5 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் 6.7 சதவீதத்திற்கு அதிகரித்திருந்த வேளையில், உணவுப் பணவீக்கமும் 2019 சனவரியின் -4.8 சதவீதத்திலிருந்து 2019 பெப்புருவரியில் -2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

இலங்கை மத்திய வங்கியின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல்

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் தொடர்பிலான ஆளுகை செயன்முறைகள் மற்றும் விளைவுகளை வழங்குவது தொடர்பான அண்மைய பத்திரிகைக் கட்டுரைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பின்வரும் தெளிவுபடுத்தல்களை வழங்க விரும்புகின்றது:

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 பெப்புருவரி

தயாரிப்பு நடவடிக்கைகள் 2019 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2019 பெப்புருவரியில் மெதுவான வீதத்தில் அதிகரித்தமைக்கு குறிப்பாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான தயாரிப்புநடவடிக்கைகளில் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் குறைவடைந்தமையே முக்கிய காரணமாகும். இவ்வீழ்ச்சிக்கு பெப்புருவரியில் வேலைநாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இணைந்துசெல்லும் விதத்தில் இம்மாதகாலத்தில் கொள்வனவுகளின் இருப்பும் குறைவடைந்தது.

எவ்வாறாயினும், இனிவரும் பருவகால கேள்விகளுக்காக வியாபார நடவடிக்கைகளை உயர்த்தும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் காரணமாக தொழில்நிலையில் சிறிய முன்னேற்றமொன்று காணப்பட்டது. அதேவேளை, நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவு வீதத்தினால் நீடிக்கப்பட்டது. பெப்புருவரியின் தொடக்கத்தில் பொருட்களின் வழங்கல் ஏற்பாடுகளும் சீன புத்தாண்டு பண்டிகை விடுமுறை காரணமாக ஏற்பட்ட வழங்கல் இடையூறுகளும் நிரம்பலர் வழங்கல் நேரத்தை நீடித்திருக்கின்றன. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்திகள் நீங்கலான அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியைப் பதிவுசெய்தன. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் திசெம்பர் 2018

2018 திசெம்பரில் இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தமையுடன் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. 2018 திசெம்பரில் ஏற்றுமதிகள் 1.4 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) வளர்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் 15.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 

2018ஆம் ஆண்டில் பொருட்களின் மொத்த ஏற்றுமதிகள் 4.7 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 11.9 பில்லியனுக்கு அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் 6.0 சதவீதத்தினால் ஐ.அ.டொலர் 22.2 பில்லியன் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. இதன் விளைவாக, 2018இல் வர்த்தகப் பற்றாக்குறை 2017இன் ஐ.அ.டொலர் 9.6 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 10.3 பில்லியனுக்கு மிதமாக விரிவடைந்தது. 

2018 திசெம்பரில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 4.8 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட ஆரோக்கியமான வளர்ச்சியுடன் தொடர்ந்தும் விளங்கி 2018இல் ஐ.அ.டொலர் 4.4 பில்லியன் கொண்ட மொத்த வருமானத்தினைத் தோற்றுவித்தது. இது 2017இனை விட 11.6 சதவீதம் கொண்டதொரு வளர்ச்சியாகும்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐ.அ.டொலர் 2.4 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குகிறது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோ~லிசக் குடியரசின் சார்பில் 2019 மாச்சு 7ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் மற்றும் 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 மாச்சு 14ஆம் நாள் மற்றும் 2029 மாச்சு 14ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் 'B2', 'B'  மற்றும் 'B' இல் முறையே தரமிடப்பட்டுள்ளன.

Pages

சந்தை அறிவிப்புகள்