Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியானது கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 யூன் 26ம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளின் கடன்வழங்கலை துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்த தீர்மானித்திருக்கின்றது. இந்த திட்டமானது,  2020 யூலை 01ம் திகதி அன்று தொடங்கிவைக்கப்படவிருப்பதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 150 பில்லியன் வரையறையினுள், சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயவிதிச்சட்டத்தின் 83ம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணையாக செயற்படும்.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் - இரண்டாம் கட்டம்

இலங்கை மத்திய வங்கி, 2020.07.02ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்தினை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய அத்தகைய கொடுப்பனவுகள் நாடுமுழுவதிலுமுள்ள மக்கள் வங்கியின் 63 கிளைகளில் இடம்பெறும். இந்நட்டஈட்டு பொறிமுறையின் நியதிகளுக்கிணங்க, ஒவ்வொரு வைப்பாளர்களுக்கும் ரூ.600,000 என்ற அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தப்படும். 

இவ்விரண்டாம் கட்ட நட்டஈட்டின் கீழ், த பினான்ஸ் கம்பனி பிஎல்சியினால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து வைப்பாளர்களுக்குமான நட்டஈடு 2020.07.02 இலிருந்து ஆரம்பிக்கப்படும்.  

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட அறிக்கை

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்டிருந்த உரிமம்பெற்ற பல நிதிக் கம்பனிகள் முறிவடைந்தமை மற்றும் அதனைத்தொடர்ந்து அவற்றின் உரிமங்கள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பான பொறுப்புக்களைச் சுமத்துகின்ற பல ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது.

உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்தி அதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்களில் ஒன்றாக விளங்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதனை மேற்கொண்டு வருகின்றது. அத்தகைய உறுதித்தன்மையானது குறைந்தபட்ச மூலதனம், குறைந்தபட்ச திரவத்தன்மை மற்றும் ஒதுக்குத் தேவைப்பாடுகள்; இடர்நேர்வுகள் ஒன்றுதிரள்வதனைக் குறைப்பதற்காக முதலீட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் கம்பனி ஆளுகைத் தேவைப்பாடுகள் போன்றவற்றினூடாக உறுதிப்படுத்தப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் கொவிட்-19 நிவாரண வழிமுறைகள்: நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் உங்களுக்கும் நாம் எவ்வாறு உதவுகின்றோம்?

இவ்வூடக அறிக்கையானது கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு, நிதியியல் முறைமைக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2020இன் இற்றைவரையிலும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பாட்டு மற்றும் கொள்கை சார்ந்த வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதனை இலக்காகக் கொள்கின்றது. நாட்டின் உச்சமட்ட நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதன் முழுமையான அத்தியாவசிய பணி நோக்கெல்லையினையும் வழங்கியது. மத்திய வங்கியானது உலகளவிலான எதிர்பாராத இவ்விடையூறின் போது பொதுமக்கள் மீதான சுமையினை தளர்த்துவதற்கு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை பொருளாதார, விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான அதன் சட்ட முறையான பொறுப்பாணை மீதான கவனத்தினை தக்கவைத்திருந்தது.

கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் தொகையுடைய கடன்களை 4% இல் வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது

கொவிட்-19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

தேசிய நுகர்வோர் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மேயில் மேலும் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இது, 2019 மேயில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலும் பிரதானமாக உந்தப்பட்டிருந்தது. அதேவேளையில், உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 12.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 11.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 1.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்