Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை சுபீட்சச் சுட்டெண் - 2018

அனைத்து மாகாண சுபீட்சச் சுட்டெண்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் காரணமாக 2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் அதிகரித்துள்ளது.

தேசிய சுபீட்சம்

2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண்  2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்துள்ளது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.

பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் மேம்பட்டமைக்கு 2018ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட விலை உறுதிப்பாடும் முறைசாராத் துறையின் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன. மக்கள் நலனோம்புகைத் துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரை முக்கியமான மேம்பாடுகள், நலவசதிகள், கல்வியின் தரம், மக்கள் செல்வம் மற்றும் சூழல் தூய்மை ஆகிய அம்சங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டுப்பகுதியில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணும் மெதுவாக அதிகரித்தமைக்கு மின்வலு, போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்பவியல் வசதிகள் என்பனவற்றின் கிடைப்பனவிலும் குழாய்வழி நீரின் தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும்.  

 

தடயவியல் கணக்காய்வுகள்

2015 பெப்புருவரி 01ஆம் திகதி தொடக்கம் 2016 மாச்சு 31ஆம் திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கல் தொடர்பாக பரீட்சித்துப் பார்த்து புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கணக்காய்வு அறிக்கைகளில் அண்மைய ஆண்டுக் காலங்களில் வெளிச்சத்திற்கு வந்த விடயங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட சில ஒழுங்குமுறைப்படுத்தல் அத்துடன் முகவர் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டவைகள் என்பனவற்றின் விளைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆலோசனையுடன் ஏற்புடைய அரசாங்கப் பெறுகை வழிகாட்டல்களுடன் இணங்கி அமைச்சரவை நியமித்த ஆலோசகர்கள் பெறுகைக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டிருந்த உலகளாவிய நடைமுறையுடனும் பன்னாட்டு அனுபவத்துடனும் கூடிய கணக்காய்வு நிறுவனங்களின் இலங்கைக்கு வெளியிலமைந்த ஆளணியினால் முழுமையாகக் கொண்டு நடாத்தப்படும் தடயவியல் கணக்காய்வுகளை தொடங்குவதற்கு உத்தியோகபூர்வ அனுமதியளித்தது.

ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது வருடாந்த மாநாடு - 2019 கொழும்பு, இலங்கை

ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாடு - 2019 இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2019 ஒத்தோபர் 28-30 வரை நடைபெற்றது. 

ஆற்றல் வாய்ந்த கொடுகடன் துணைநிரப்பு முறைமைகளை ஊக்குவித்து விருத்தி செய்யும் குறிக்கோளுடன் ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் 1987இல் நிறுவப்பட்டது. ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியம் என்பது 11 நாடுகளிலிருந்து 16 உறுப்பு நிறுவனங்களை உள்ளடக்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான பாரிய ஆசிய கூட்டுறவு நிறுவனமாகும். ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின்; நடப்பு உறுப்பு நாடுகளாக இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, மொங்கோலியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்வான் மற்றும் தாய்;லாந்து என்பன அங்கம் வகிக்கின்றன.  

மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் . 

மேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முக்கியமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கசிவுத் தாக்கத்தினை உள்ளடக்கிய உள்நாட்டுப் பக்கத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு மத்தியில் ஆண்டின் முதலரைப் பகுதியில் மெதுவடைந்திருந்தது. இதன்படி, உண்மை நியதிகளில் பொருளாதாரம் 2018இன் தொடர்பான காலப்பகுதியின் 3.9 சதவீதத்துடன் ஒப்பிடுமிடத்து 2019இன் முதலரைப் பகுதியில் 2.6 சதவீதமான மெதுவான வேகத்தில் வளர்ச்சியடைந்திருந்தது. மந்தமான பொருளாதார வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் வகையில் தொழிலின்மை வீதமும் 2019இன் முதலரைப்பகுதியில் அதிகரித்திருந்தது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட ஒழுங்குகளின் ஆறாவது மீளாய்வினைப் பூர்த்தி செய்துள்ளது

•இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது. 

•தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் உறுதியானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைத்து நிற்கும்கொள்கை ஒழுங்காற்று தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது. 

•அரசிறையின் சேகரிப்பு அரச படுகடனை ஒரு கீழ்நோக்கிய பாதையில் வைத்திருக்கும் வேளையில், சமூக மற்றும் முதலீட்டு செலவினத்தினை பாதுகாப்பதற்கும் மையமாகவிருக்கும். 

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2018இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீளமைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அத்தகைய முயற்சிகள் திருப்திகரமான மட்டத்தில் இன்னமும் வெற்றியளிக்கவில்லை. 

Pages

சந்தை அறிவிப்புகள்