2020 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான பொருளாதார இடையூறுகளினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பகுதியளவிலான முடக்கம் விதிக்கப்பட்டமையானது 2020 ஏப்பிறலில் இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதிகள் துறையினைக் குறிப்பிடத்தக்களவில் பாதித்த வேளையில், சுற்றுலாத் தொழில் துறையினை முழுமையாகவே இழுத்து மூடியிருக்கிறது. இறக்குமதிகளுடன் தொடர்பான நிரம்பல் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினாலும் வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது. சில புலம்பெயர் வேலையாட்கள் முடக்கத்திற்கு முன்னதாகவே நாட்டிற்கு மீண்டும் வந்துவிட்டமையினதும் வெளிநாட்டிலுள்ள சில புலம்பெயர் வேலையாட்களினால் எதிர்நோக்கப்பட்ட சம்பளக் குறைப்பு மற்றும் தொழில் குறைப்பினதும் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவுசெய்தன.