Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 யூலை

2020 யூலையில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை, வணிகப்பொருட்களின் இறக்குமதிகளில் காணப்பட்ட குறைப்புக்களுக்கும் மத்தியிலும் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளில் காணப்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் உதவியுடன் மேலும் மீட்சியடைந்தது. கொவிட்-19 தொற்றிற்கு மத்தியிலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகள் அவதானிக்கப்பட்டன. யூலையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2020 சனவரியின் பின்னர் முதற்றடவையாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டதுடன் 2020 பெப்புருவரியின் பின்னர் முதற்றடவையாக நேர்க்கணியமான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியையும் பதிவுசெய்தது. எதிர்பார்க்கப்பட்டவாறு, இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருட்களின் இறக்குமதிகள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டன. 2020 யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்களில் கணிசமானளவு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டதுடன் 2018 சனவரியின் பின்னர் மாதாந்தப் பணவனுப்பல்களில் மிக உயர்ந்த தொகையொன்று பதிவுசெய்யப்பட்டது.

நாடுமுழுவதற்குமான LankaQR பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

இலங்கை மத்திய வங்கி LankaQR தொடர்பில் நிதியியல் நிறுவனங்களுடன் சேர்ந்து 'மாத்தளைக்கு LankaQR" (LankaQR ஐ மாத்தளைக்கு எடுத்துச் செல்வோம்) என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் - மாத்தளையில் செயலிகள்(apps) கொடுப்பனவுகளை இயலச்செய்யும் விதத்தில் 2020 செத்தெம்பர் 12ஆம் திகதியன்று 'மாத்தளை LankaQR" என்ற நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு பிரச்சாரமொன்றினை ஆரம்பித்தது. இவ்வாரம்ப வைபவத்திற்கான முதன்மை விருந்தினராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன்  கலந்து கொண்டார். உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு முறைமையின் சேவை வழங்குநர்களாக தொழிற்படுகின்ற தொலைத் தொடர்பூட்டல் கம்பனிகளின் முதன்மை நிறைவேற்று அலுவலர்களும் அதேபோன்று லங்காகிளியர் (பிறைவேட்) லிமிடெட்டின் பிரதிநிதிகளும் மாத்தளை பிரதேசத்திலுள்ள முக்கியமான அரச அதிகாரிகளும் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

'இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2020" வெளியீடு

“இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2020” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவினை அடையாளப்படுத்தி புள்ளிவிபரத் திணைக்களமானது எளிதாக உசாவும் விதத்தில் வெளியிட்டின் அமைப்பினை மீளக்கட்டமைத்துள்ள அதேவேளை அதன் உள்ளடக்கத்திற்கு மெருகூட்டுவதற்கு மேலும் புள்ளிவிபரங்களைச் சேர்த்துள்ளது. அதற்கமைய, புதிய பதிப்பானது எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்றது. 

இவ்வெளியீடு அச்சு மற்றும் வெப்தள பதிப்புகள் என்ற இரண்டிலும் கிடைக்கப்பெறுவதுடன் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமிக்க எவருக்கும் பயன்மிக்க தகவல் சேகரிப்பினைக் கொண்டிருக்கும். 

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஓகத்தில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 4.1 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2019 ஓகத்தில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 10.9 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூலையில் 1.5 சதவீதத்திலிருந்து 2020 ஓகத்தில் 0.8 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தில் 4.8 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி - 2020 முதலரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் முதலரையாண்டு காலப்பகுதியின் போது 7.1 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 141.6ஆகக் காணப்பட்டது. அதேவேளை, அரையாண்டு அடிப்படையில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2.0 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்துள்ளது. காணி மதிப்பீட்டுக் குறிக்காட்டியின் ஆண்டு மற்றும் அரையாண்டு என்ற இரண்டினதும் சதவீத மாற்றங்கள், அண்மைய காலப்பகுதிகளின் போது வீழ்ச்;சிப்போக்கொன்றினைக் காண்பித்தன. 

காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி மதிப்பீட்டு குறிகாட்டி, வர்த்தகக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. கைத்தொழில் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 7.2 சதவீதம் கொண்ட உயர்வான ஆண்டு அதிகரிப்பினை பதிவுசெய்த அதேவேளை வதிவிடக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் வர்த்தகக் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி ஆகிய இரண்டும் 7.1 சதவீத அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. 

மத்திய வங்கி 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை 2020 செத்தெம்பர் 30ஆம் நாள்வரை நீடித்திருக்கிறது

நாணயச் சபை 2020 ஓகத்து 19ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் 4 சதவீதம் கொண்ட தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் இறுதித் திகதியினை நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. இதற்கமைய, கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களும் தனிப்பட்டவர்களும் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் கீழான தமது கடன் விண்ணப்பங்களை தொடர்பான உரிமம்பெற்ற வங்கிகளுக்கு 2020 செத்தெம்பர் 30ஆம் நாள்வரை சமர்ப்பிக்கமுடியும். 

அதேவேளை, மேற்குறிப்பிட்ட வசதியின் கீழ் 36,489 விண்ணப்பதாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட கடன்களுக்கு ரூ.100,017 மில்லியன் பெறுமதியான தொகைக்கு ஒப்புதலளித்ததன் மூலம் 2020 ஓகத்து 18ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் கடன் தொகை ரூ.100 பில்லியன் கடன் தொகைகள் மைல்கல்லினைக் கடந்தது. ஒப்புதலளிக்கப்பட்ட கடன்களில் 2020 ஓகத்து 18ஆம் நாள் உள்ளவாறு, நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 25,365 வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையே ரூ.68.5 பில்லியனுக்கும் கூடுதலான தொகையினை உரிமம்பெற்ற வங்கிகள் ஏற்கனவே பகிர்ந்தளித்திருக்கின்றன. (விபரங்களுக்கு அட்டவணை 1இனைப் பார்க்கவும்).

Pages

சந்தை அறிவிப்புகள்