இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 ஒத்தோபர் 21ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் தற்போதுள்ள அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளது. இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் மத்திய வங்கியினால் முன்னொருபொழுதுமில்லாத வகையில் எடுக்கப்பட்ட நாணய தளர்த்தல்களினைத் தொடர்ந்து, சபையானது ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்திருந்ததுடன் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் பரந்தளவிலான கீழ்நோக்கிய திருத்தத்தின் தொடர்ச்சியினையும் எதிர்பார்க்கின்றது. இதன்மூலம், தற்போது காணப்படுகின்ற தாழ்ந்தளவிலான பணவீக்க சூழலில் பொருளாதாரத்தில் திறன்மிக்க துறைகளுக்கு வசதியான கொடுகடன் பாய்ச்சல்களினையும் உறுதிசெய்கின்றது.
Thursday, October 22, 2020