Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2017 திசெம்பரில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013ஸ்ரீ100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 நவெம்பரின் 8.4 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பர்pல் 7.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2016 திசெம்பரில் நிலவிய உயர்ந்த தளத் தாக்கமே காரணமாகும்.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றம் 2017 நவெம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2017 திசெம்பரில் 7.7 சதவீதத்துக்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 திசெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும ;போது 0.3 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 நவம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 திசெம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக அதிகரித்திருந்த உற்பத்தி துணைச்சுட்டெண்ணினால் உந்தப்பட்டது. மேலும் நவம்பர் 2017 உடன் ஒப்பிடுகையில் மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண் குறைவான வீதத்தில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை திசெம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை

2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உடனடி அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் 2018 சனவரி 11ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றது. அதிலுள்ள இறுதிப்பந்தியானது தடயம்சார் கணக்காய்வொன்று நடாத்தப்படும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கணக்காய்வானது 2008  தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் மற்றும் ஊழியர் சேம நிதியத் தொழிற்பாடுகள் மீது கவனம் செலுத்தும். இது வெளித்தரப்பினர் மூலம் நடாத்தப்படும். தடயம்சார் கணக்காய்வு நிறைவுபெறுவதற்கு முன்னர் இது தொடர்பில் ஏதேனும் அறிக்கையொன்றினை வெளியிடுவது உசிதமானதல்ல.  

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை

2015 பெப்புருவரி 01 இலிருந்து 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி புலனாய்வுக் குழுவின் விதந்துரைப்புக்கள் மற்றும் அறிக்கை தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அறிக்கையும் பொதுப்படுகடன் மற்றும் ஊழியர் சேம நிதியத்தின் முகாமைத்துவத்தினையும் கட்டுப்பாட்டினையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகளும்.

2015 பெப்புருவரி 01 திகதி தொடக்கம் 2016 மாச்சு 31 வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கியமை தொடர்பாக பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியொன்றினை சனாதிபதியின் செயலாளர் 2018 சனவரி 10ஆம் நாளன்று அறிக்கையில் உள்ளடங்களப்பட்டுள்ள விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தும் விதத்தில் அதனைப் பரிசீலிக்கும் பணியினை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரிடம் ஒப்படைக்கும் விதத்தில் கையளித்துள்ளார்.

பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடரும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, 2018 சனவரி 04ஆம் நாளன்று பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிட்டெட்டினை முதனிலை வணிகர் வியாபாரத்தினையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்துவதனை 2018 சனவரி 05ஆம் நாள் பி.ப. 04.30 மணியளவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

வழிகாட்டல் 2018 - 2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2017ஆம் ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. கொந்தளிப்பான வானிலை நிலைமையின் காரணமாக பொருளாதார ரீதியான தாக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். வரட்சியும் வெள்ளமும் வேளாண்மை நடவடிக்கைகளையும் வேளாண்மையினை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் நடவடிக்கைகளையும் தடங்கலுறச் செய்தன. இம்மோசமான வானிலை நிலைமைகளிலிருந்து கசிந்த தாக்கங்கள் பொருளாதாரத்தின் மற்றைய துறைகளையும் பாதித்தன. இதன் விளைவாகப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் தொடக்கத்தில் குறைவானதாகவும் எறிவு செய்யப்பட்டதிலும் பார்க்கக் குறைவானதாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையும் அதேபோன்று அரசாங்கத்தின் ஒப்பீட்டு ரீதியான இறுக்கமான இறைக் கொள்கை நிலையும் அரச மற்றும் தனியார் முதலீட்டுச் செலவிடலை ஓரளவிற்குப் பாதித்து தாழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தன.

Pages

சந்தை அறிவிப்புகள்