Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறைமை

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும். 

இந்த புதிய முறைமையானது மிகவும் கடட் மைப்பானதாக காணப்படுவதுடன் ஒழுங்கான மாதாந்த திறைசேரி முறிகளின் வழங்கல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு மாதாந்த வழங்கலானது இரண்டு வேறுபட்ட முதிர்ச்சிகளை கொண்ட முறித் தொடர்களினை வழங்குவதுடன், தொடர்களின் முதிர்ச்சிக் காலப்பகுதியானது சந்தையில் கிடைக்கத்தக்க வளங்களுடன் ஒத்துப்போவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

வாடிக்கையாளர் தகவல்களை ஹற்றன் நஷனல் வங்கி கசியச் செய்தமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் அறிக்கை

இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களின்படி, 4,630 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சில வங்கித்தொழில் தகவல்களுடன் தொடர்புடைய இச்சம்பவமானது கவனக் குறைவினால் ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகின்றது. மேலும், இச்சம்பவத்திற்கு ஹற்றன் நஷனல் வங்கிக்குள் வாடிக்கையாளர் தகவல்களை முகாமை செய்வதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் உள்ளகக் குறைபாடுகளே காரணமென அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடயமானது, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினாலும் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

இதன்படி, சட்ட ஏற்பாடுகள் அத்துடன் தொடர்பான மேற்பார்வை நியமங்களின் நியதிகளில் இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால மேற்பார்வை வழிமுறைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2017 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 7.1 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2017 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.1 சதவீதத்தில் மாறாது காணப்பட்டது. 

பன்னாட்டு நாணய நிதியம் விரிவாகக்ப்பட்ட நிதிய வசதியின் கீழ் ஐ.அ.டொலர் 167.2 மில்லியன் கொண்ட மூன்றாவது தொகுதிக் கடனை விடுவிக்கவுள்ளது

பன்னாட்டு நாணய நிதியமானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 167.2 மில்லியன்) பெறுமதியான மூன்றாவது தொகுதியினை 2017 யூலை 19ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 யூன்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூன் மாதத்தில் 56.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 மே மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன் இதற்கு பாதகமான வானிலை நிலைமைகளினால் பகுதியளவில் செல்வாக்கு செலுத்தப்பட்ட புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட ஒரு குறைவே பிரதான காரணமாக அமைந்தன. இதன் விளைவாக மேலதிகமான இருப்பு மட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தில் ஒரு சிறிதளவான குறைவும் உணரப்பட்டது. இருப்பினும், தொழில்நிலை மட்டமானது முன்னைய மாதத்தில் உணரப்பட்ட சுருக்கத்திலிருந்து மீட்சியடைந்து ஒரு மேம்பாட்டினை காட்டியது. மேலும், கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்கு மேலும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.

Pages

சந்தை அறிவிப்புகள்