பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.