Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஏப்பிறலில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மாச்சின் 5.4 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது 2019 ஏப்பிறலில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் மாத்திரமே உந்தப்பட்டது. இதே வேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 ஏப்பிறலில் 13.2 சதவீதத்தினை பதிவு செய்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமானது 2020 மாச்சின் 2.5 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2019ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின்படி இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையின் எழுபதாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களால் இலங்கையின் பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உச்சபட்ச வட்டி வீதங்களை விதிக்கின்றது

உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5  சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது. கொவிட் - 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் முதனிலை வணிகருக்கான உரிமத்தினை மீளப்பெறல்

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதனை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 மே 01 இலிருந்து யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி முதனிலை வணிகராக செயற்படுவதனை நிறுத்துவதற்கு அனுமதியளித்திருக்கின்றதென்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவித்திருக்கின்றது. யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியானது லங்கா தீர்ப்பனவு முறைமையில் நேரடி வணிக பங்குபற்றுநராக தொடர்ந்து தொழிற்படும் என்பதுடன் தனது வாடிக்கையாளர் சார்பாக பத்திரங்களற்ற அரச பிணையங்களின் கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்டு லங்கா செக்குயர் முறைமையில் வாடிக்கையாளர் கணக்குகளையும் பராமரிக்கும்.

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியின் வியாபர தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே இவ்வனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி உரிமம்பெற்ற வணிக வங்கியாக அதனுடைய செயற்பாடுகள்/ சேவையினை இது எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது.
 

2020 மாச்சில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியின் 8.1 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 7.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இது உணவு வகையிலுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த குறைவினால் பிரதானமாக உந்தப்பட்டது. அதன்படி, ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 பெப்புருவரியின் 16.3 சதவீதத்திலிருந்து 2020 மாச்சில் 14.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதே வேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமானது 2020 மாச்சில் 1.8 சதவீதத்தினை பதிவு செய்தது.

கற்கைகளைத் தொடர்வதற்கும் குறுகியகால விஜயங்கள் மீதும் தமது செலவுகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு நிதியங்களை அனுப்புதல்

இலங்கை மத்திய வங்கியானது, ஓய்வு மற்றும் விடுமுறை, உறவினர்களை மற்றும் நண்பர்களைச் சந்தித்தல், யாத்திரை, வியாபார நோக்கங்கள், பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள், மருத்துவச் சிகிச்சைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார செயற்பாடுகள் போன்றவற்றுக்கான குறுகிய விஜயங்களுக்காகவும் அத்துடன் மாணவர் அல்லது அதற்குச் சமமான வீசாக்களிலும் வெளிநாடு சென்றுள்ள சில இலங்கையர்கள் தற்போது நிலவுகின்ற தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் இலங்கையிலுள்ள அவர்களது குடும்பங்கள் வெளிநாடுகளிலுள்ள அத்தகைய ஆட்களுக்கு வாழ்க்கைச் செலவுகளை/ பராமரிப்புச் செலவுகளை நிறைவேற்றுவதற்கு பணம் அனுப்புவதற்கு ஆர்வமாகவுள்ளனர் என்பது பற்றியும் அறிந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்கின்றது.

Pages

செய்தி வெளியீடுகள்

சந்தை அறிவிப்புகள்