2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது.
இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். இக்கருமபீடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரு தனிநபரினால் பெற்றுக்கொள்ளக்கூடிய ரூ.1/=,ரூ.2/=, ரூ.5/=, ரூ.10/= போன்ற ஏதாகிலும் முகப்பெறுமதியிலிருந்து உயர்ந்தபட்சப் பெறுமதி ரூ.20,000 ஆகும்.