இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, (நாணயச் சபை) 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு 2021.04.12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படும் என்பதை இலங்கை மத்திய வங்கி, த பினான்ஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு/ சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு அறியத்தருகின்றது.
பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் மெய்நிகர் நாணயத்தின் பயன்பாடு தொடர்பான அண்மைய விசாரணைகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதுடன் சேர்ந்து காணப்படும் இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகிறது.
சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், த ஸ்டான்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி ஆகியவற்றின் வைப்பாளர்களுக்குஃ தொடர்புடைய சட்ட பூர்வமான பயன்பெறுநர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் ரூ.500,000 கொண்ட அதிகரிக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையினை கொடுப்பனவு செய்வதனை இலங்கை மத்திய வங்கி தொடங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2021 ஏப்பிறல் 7ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திலும் 5.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானத்திருக்கிறது. சபையானது பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளையும் மிகக் கவனமாகப் பரிசீலனையில் கொண்டதன் பின்னர் இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. சபையானது தொடர்ந்தும் குறைந்த வட்டி வீத அமைப்பினைப் பேணுவதற்கு தொடர்ந்தும் கடப்பாடு கொண்டிருப்பதன் மூலம் தற்போது நிலவும் தாழ்ந்த வட்டி வீதச் சூழல் மற்றும் நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் பின்னணியில் உறுதித்தன்மை வாய்ந்த பொருளாதார மீட்சியொன்றிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு உறுதியளிக்கிறது.
உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான கடன் நிலுவைகளின் தீர்ப்பனவு திட்டமிடப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என இன்று குறித்த நாளிதழொன்று தவறான அத்துடன் அடிப்படையற்ற செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி ஏமாற்றத்துடன் அவதானம் செலுத்துகின்றது.