Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ரூபாவின் அளவுக்கு மீறிய பெறுமானத் தேய்வினை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றது

செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது. அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதற்குப் பின்னர் பொருத்தமான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இந்நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் ஒன்றிணைந்து 2020 நவெம்பரில் அவதானிக்கப்பட்ட ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் ரூபா உயர்வடைவதை இயலச்செய்யும்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஒத்தோபரின் 5.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 நவெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 ஒத்தோபரின் 10.6 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 9.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஒத்தோபரின் 1.5 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஒத்தோபரில் 6.2 சதவீதத்திலிருந்து 2020 நவெம்பரில் 6.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி - 2019

நாட்டின் வர்த்தக மற்றும் நிர்வாக தலைநகரத்தை தன்னகத்தே கொண்ட மேல் மாகாணம், பொருளாதாரத்தின் முன்னோடியாக தொடர்ந்தும் விளங்கியது. எனினும் பிராந்திய ஏற்றத்தாழ்வு சுருக்கமடைவதற்கு பங்களித்து அதன் பங்கு வீழ்ச்சியடைந்தது

நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாரிய பங்கினை (39.1 சதவீதம்) மேல் மாகாணம் தனதாக்கிக் கொண்டது. எனினும், ஏனைய மாகாணங்களில் கிடைத்த அதிகரித்த பங்களிப்பின் காரணமாக அதன் பங்கு 2018 இலிருந்து 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மத்திய (11.5 சதவீதம்) மற்றும் வடமேல் (10.7 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளுக்கு தரப்படுத்தப்பட்டன.

புதிய துணை ஆளுநர்களை நியமித்தல்

நாணயச் சபையானது கௌரவ நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து மற்றும் திரு. என். டபிள்யு. ஜி. ஆர். டி. நாணயக்கார ஆகிய உதவி ஆளுநர்களை 2020 திசெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு பதவி உயர்த்தியுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 நவெம்பர்

தயாரிப்புத் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 நவெம்பரில் விரிவடைந்த வேளையில், பணிகள் துறைக்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேல்நோக்கி திருப்பமடைந்த போதிலும் இன்னும் குறிப்பிடத்தக்களவு மட்டத்திற்கு கீழாகவே காணப்படுகிறது.

தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது 2020 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 17.3 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2020 நவெம்பரில் 57.6 இற்கு உயர்வடைந்தது. புதிய கட்டளைகளில் குறிப்பாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உணவு மற்றும் குடிபானத் துறைகளின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கணிசமான மேம்படுதலுக்கு பிரதானமாக பங்களித்துள்ளது. உற்பத்தித் துணைச் சுட்டெண்ணில், பிரதானமாக புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் அத்துடன் உலோகமல்லாத கனிம உற்பத்திகள் துறைகளின் தயாரித்தலின் விளைவான  அதிகரிப்பானது அனைத்துத் துறைகள் முழுவதும் நிரம்பலர்களின் விநியோக நேரத்தின் வீழ்ச்சியடைதலுடன் ஒன்றிணைந்து தயாரிப்பு கொ.மு.சுட்டெண்னின் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஒத்தோபர்

2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு  வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள், தொடர்ந்தும் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்