இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 சனவரி 18ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது 2020 காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பினைக் கருத்திற்கொண்டு, கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது. 2020 நவெம்பரில் அறிவிக்கப்பட்டவாறு வங்கித்தொழில் சமூகத்தின் ஆலோசனையுடன் பரந்த அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறைக்கென முன்னுரிமைத் துறை கடன்வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்துவதற்கு சபை தீர்மானித்தது.

முமுவடிவம்

 

Published Date: 

Tuesday, January 19, 2021