Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 திசெம்பர்

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்புநிலை அடைவதிலிருந்து நன்மையடைந்து தயாரிப்பு கொ.மு.சுட்டெண்ணானது 2020 திசெம்பரில்  தொடர்ந்தும் அதிகரித்து  மாதாந்த அடிப்படையில் 61.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. இதற்கு உற்பத்தி, புதிய கட்டளைகள், தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் இருப்பு துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 நவெம்பர்

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சிக்கு மத்தியிலும் 2020 நவெம்பரில் வெளிநாட்டுத் துறையில் குறைவான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன உள்ளடங்கலாக பல சாதகமான முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தமை மற்றும் குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு வணிகப்பொருள் இறக்குமதிகள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையுடன் உள்நாட்டு உற்பத்திச் செயன்முறைகளுக்கான இடைத்தடங்கலின் காரணமாக முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று காணப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்கள் நவெம்பரிலும் தொடர்ந்தும் வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. நிதியியல் கணக்கில், அரசாங்கப் பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலும் வெளிநாட்டு முதலீடு 2020 நவெம்பரில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் பதிவாகின.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின்; ஐம்பது சதவீத (50%) மீள்கொடுப்பனவு (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் 2021 சனவரி 13ஆம் திகதியிலிருந்து தொடங்கி 2021 ஏப்பிறல் 12ஆம் திகதி வரையான மட்டுப்படுத்தப்பட்ட மூன்று (03) மாதங்களைக் கொண்ட காலப்பகுதியொன்றுக்காக பொது நலனுக்காகவும் கம்பனியின் வைப்பாளர்களின் நலன்களுக்காகவும் பல கட்டாய நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் (முகாமைத்துவக் குழாம்) மேற்பார்வையின் கீழ் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக  மற்றும் வரையறுக்கப்பட்ட காலமொன்றுக்காக வியாபாரத்தினை பெயரளவில் மீள ஆரம்பிப்பதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் - முடிவுறுத்துவதற்காக தகைமைவாய்ந்த நீதிமன்றத்திற்கு விண்ணப்பமொன்றினை மேற்கொள்ளல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(ஆ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டை முடிவுறுத்துவதற்காக தகைமைவாய்ந்த நீதிமன்றமொன்றுக்கு விண்ணப்பத்தை மேற்கொள்ளுமாறு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிப்பாளரை பணிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

2011ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் பணிப்பாளர் சபையினதும் சிரேஸ்ட முகாமைத்துவத்தினதும் இயலாமை என்பன காரணமாக நாணயச் சபையானது 2018 சனவரி 02 அன்று கம்பனியின் பணிப்பாளர்களுக்கு பணிப்புரைகளை விடுத்து கம்பனியின் விவகாரங்களைத் மேற்பார்வை செய்வதற்கு முகாமைத்துவக் குழாமொன்றினை நியமித்தது.

முழு வடிவம்

நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2020 காலப்பகுதியில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து  வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில் கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்