Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி – எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீத மீள்கொடுப்பனவு

2021 சனவரி 12ஆம் திகதியிடப்பட்ட எமது ஊடக அறிக்கை மூலம் தொடர்பூட்டப்பட்டவாறு, நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீதம் (50%) வரையான மீள்கொடுப்பனவுக்கான (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் நிபந்தனையுடனான அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட காலமொன்றிற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாபாரத்தினை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட கட்டளையினைத் தொடர்ந்து, சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத மீள்கொடுப்பனவு மற்றும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தகைமையுடைய நட்டஈடு என்பவற்றைக் கழித்ததன் பின்னர் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீதம் 2021 பெப்புருவரி 03ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து மீள்கொடுப்பனவு செய்யப்படவுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 சனவரியில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 திசெம்பரின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 3.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2020 சனவரி காலப்பகுதியில் நிலவிய உயர்வான தளத்தின் புள்ளிவிபரத் தாக்கம் இதற்குக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 9.2 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 6.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மேலும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 திசெம்பரின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திலிருந்து 2021 சனவரியில் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

உரிமம்பெற்ற வங்கிகளின் தற்றுணிபுக் கொடுப்பனவுகள் மீதான கட்டுப்பாடுகள்

உரிமம்பெற்ற வங்கியினால் காசுப் பங்கிலாபம் செலுத்துதல் உள்ளிட்ட தற்றுணிபுக் கொடுப்பனவுகள் தொடர்பில் சமீப காலத்தில் வெளியாகும் மாறுபட்ட கருத்துக்களை அவதானிக்குமிடத்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது.

இணையம் ஊடான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் பற்றி அவதானமாக இருங்கள்

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இம்மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது செல்லிடத்தொலைபேசி செயலி அடிப்படையிலமைந்த இலகு கடன் திட்டங்கள் ஊடாகவே நடாத்தப்படுகின்றன. அத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது மோசடிக்காரர்கள் பின்வருவன போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களைப்/ தரவுகளைப் பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றனர்;

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 திசெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 நவெம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 திசெம்பரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 நவெம்பரின் 9.4 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 7.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 1.7 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 நவெம்பரின்  6.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 சனவரி 18ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது 2020 காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பினைக் கருத்திற்கொண்டு, கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது.

Pages

சந்தை அறிவிப்புகள்