காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி – 2020 இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2020இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 4.6 சதவீத ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து 145.2ஆகக் காணப்பட்டது. எனினும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அதிகரிப்பு மட்ட சதவீதமானது அண்மைக்காலங்களில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிப் போக்கிற்கு இசைவாகக் காணப்பட்டது. மேலும், காணி மதிப்பீட்டுக் குறிகாட்டி 2020இன் முதலரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2020இன் இரண்டாம் அரையாண்டிற்கு 2.5 சதவீதம் கொண்ட அதகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது.

முழு வடிவம்

Published Date: 

Thursday, February 25, 2021