Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் கொவிட்-19 நிவாரண வழிமுறைகள்: நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் உங்களுக்கும் நாம் எவ்வாறு உதவுகின்றோம்?

இவ்வூடக அறிக்கையானது கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு, நிதியியல் முறைமைக்கு மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2020இன் இற்றைவரையிலும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்பாட்டு மற்றும் கொள்கை சார்ந்த வழிமுறைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்பூட்டுவதனை இலக்காகக் கொள்கின்றது. நாட்டின் உச்சமட்ட நிதியியல் நிறுவனம் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியானது முடக்கல் காலப்பகுதியின் போது பொருளாதாரத்திற்கும் நிதியியல் முறைமைக்கும் அதன் முழுமையான அத்தியாவசிய பணி நோக்கெல்லையினையும் வழங்கியது. மத்திய வங்கியானது உலகளவிலான எதிர்பாராத இவ்விடையூறின் போது பொதுமக்கள் மீதான சுமையினை தளர்த்துவதற்கு முனைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேவேளை பொருளாதார, விலை மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான அதன் சட்ட முறையான பொறுப்பாணை மீதான கவனத்தினை தக்கவைத்திருந்தது.

கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் தொகையுடைய கடன்களை 4% இல் வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது

கொவிட்-19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள் மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

தேசிய நுகர்வோர் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மேயில் மேலும் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இது, 2019 மேயில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலும் பிரதானமாக உந்தப்பட்டிருந்தது. அதேவேளையில், உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 12.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 11.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 1.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஏப்பிறல்

2020 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான பொருளாதார இடையூறுகளினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பகுதியளவிலான முடக்கம் விதிக்கப்பட்டமையானது 2020 ஏப்பிறலில் இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதிகள் துறையினைக் குறிப்பிடத்தக்களவில் பாதித்த வேளையில், சுற்றுலாத் தொழில் துறையினை முழுமையாகவே இழுத்து மூடியிருக்கிறது. இறக்குமதிகளுடன் தொடர்பான நிரம்பல் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினாலும் வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது. சில புலம்பெயர் வேலையாட்கள் முடக்கத்திற்கு முன்னதாகவே நாட்டிற்கு மீண்டும் வந்துவிட்டமையினதும் வெளிநாட்டிலுள்ள சில புலம்பெயர் வேலையாட்களினால் எதிர்நோக்கப்பட்ட சம்பளக் குறைப்பு மற்றும் தொழில் குறைப்பினதும் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவுசெய்தன.

இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கான புதிய கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்த் தாக்கமானது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பன மீது தீவிரமான அழுத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். இப்பின்னணியில், பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ் புதிய கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 யூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நியதி ஒதுக்கு விகிதத்தின் இக்குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும்.
 

Pages