நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவினை மீளமைத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது 2021 ஒத்தோபர் 5ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் மீளமைக்கப்பட்டுள்ளது. நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது தனியார் துறையிலிருந்தும் கல்விசார் துறையிலிருந்தும் 12 கீர்த்திமிக்க ஆளுமைகளைக் கொண்டமைந்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினருமான திரு. சுனில் லங்காதிலக அவர்களினால் தலைமை தாங்கப்படுகின்றது. ஸ்டெசன் கம்பனிகள் குழுமத்தின் பிரதம நிதியியல் அதிகாரி திருமதி. தமிதா கூகே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இறக்குமதிப் பிரிவின் தலைவர் திரு. நிரன்ஜன் திசாநாயக்கா, எக்ஸஸ் இன்ஜினியரிங் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கிரிஸ்தோபர் ஜோசா, பொருளியல் துறைப் போராசிரியர் சுனந்த மத்தும பண்டார, பிரென்டிக்ஸ் லங்கா லிமிடட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்ரப் ஓமார்,  ஸொப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அசோக் பதிரகே, வலிபெல் வன் பிஎல்சி இன் தலைவர் மற்றும் ஹேலீஸ் பிஎல்சி இன் துணைத் தலைவர் திரு தம்மிக பெரேரா, மெயினெடெக் லங்கா (பிறைவேட்) லிமிடெட்டின் தலைவர் திரு. ஜெயம் பெருமாள், டிஎஸ்ஐ சம்சொன் குழும வாழ்நாள் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. குலதுங்க ராஜபக்ஷ், ஓய்வுபெற்ற மூத்த வங்கியியலாளர் திரு. ருச்சிரிபால தென்னகோன் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி செல்வி. கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

முழுவடிவம்

Published Date: 

Monday, October 18, 2021