இலங்கை மத்திய வங்கியினால் 2021.10.01 அன்று முன்வைக்கப்பட்ட “பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத வழிகாட்டல்” இன் பிரகாரம் நாட்டிற்கான பன்னாட்டு முறி முதலீட்டுத் தொகையானது அடுத்துவருகின்ற மூன்று வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ 10 சதவீதத்திற்குப் படிப்படியாகக் குறைக்கப்படவுள்ளது. இக்குறிக்கோளுக்கமைவாக, 2021 செத்தெம்பர் காலப்பகுதியில் எதிர்வருகின்ற 2022 இன் சனவரி மற்றும் யூலை நாட்டிற்கான பன்னாட்டு முறி முதிர்ச்சிகளின் வர்த்தகப்படுத்தலில் கழிவுசெய்யப்பட்ட விலைகளை அவதானத்திற்கொண்டு, பல எண்ணிக்கையான பன்னாட்டு வங்கிகளுடனும் முதலீட்டு வங்கிகளுடனுமான ஆலோசனையுடன் மீள்கொள்வனவு நடைமுறையொன்றினை நிறைவேற்றும் சாத்தியப்பாட்டினை மத்திய வங்கி கண்டறிந்தது.















இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில் அவர்களின் நேரத்தையும் செலவையும் மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும் தனியொரு மூலமாக இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.
