Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது;

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல்

2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு வங்கிகள் விற்பனை செய்யும் வெளிநாட்டுச் செலாவணியின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் அதிகரிக்கப்பட்டமை வங்கிகளுக்கே பிரத்தியேகமாக ஏற்புடைத்தானதெனவும் அது வெளிநாட்டில் பணிபுரிவோர்களினது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தற்போதைய தேவைப்பாடுகளின் மீது எந்தவொரு தாக்கத்தினையும் கொண்டிருக்காது என்பதனையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.
 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது.

இலங்கை மத்திய வங்கி, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

நாட்டின் முதலாவது மருத்துவபீடம் என்ற ரீதியில் நாட்டிற்கு அது வழங்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நாணயக்குற்றியானது கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவபீடத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி இலங்கையில் குடிசன, வீட்டு வசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

இலங்கையில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்த நிகழ்வினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிடுகிறது. இந்நாணயக்குற்றியானது இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்படுகிறது. 

இலங்கையில் முதலாவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 1871இல் நடத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது. 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டினை 2021இல் அதன் ஆண்டு நிறைவுடன் சேர்த்து நடத்துவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீடு 2022 - 2023 வரை பிற்போடப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும்

செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்