Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தேசிய நுகர்வோர் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மேயில் மேலும் குறைவடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்பிறலில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இது, 2019 மேயில் நிலவிய உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினாலும் பிரதானமாக உந்தப்பட்டிருந்தது. அதேவேளையில், உணவுப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 12.2 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 11.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் உணவல்லா பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஏப்பிறலின் 1.1 சதவீதத்திலிருந்து 2020 மேயில் 0.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஏப்பிறல்

2020 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கொவிட்-19 தொற்றுடன் தொடர்பான பொருளாதார இடையூறுகளினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நாட்டில் பகுதியளவிலான முடக்கம் விதிக்கப்பட்டமையானது 2020 ஏப்பிறலில் இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதிகள் துறையினைக் குறிப்பிடத்தக்களவில் பாதித்த வேளையில், சுற்றுலாத் தொழில் துறையினை முழுமையாகவே இழுத்து மூடியிருக்கிறது. இறக்குமதிகளுடன் தொடர்பான நிரம்பல் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாகவும் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் இன்றியமையாதனவல்லாத இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினாலும் வணிகப்பொருள் இறக்குமதிகள் மீதான செலவினம் வீழ்ச்சியடைந்தது. சில புலம்பெயர் வேலையாட்கள் முடக்கத்திற்கு முன்னதாகவே நாட்டிற்கு மீண்டும் வந்துவிட்டமையினதும் வெளிநாட்டிலுள்ள சில புலம்பெயர் வேலையாட்களினால் எதிர்நோக்கப்பட்ட சம்பளக் குறைப்பு மற்றும் தொழில் குறைப்பினதும் காரணமாக இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவுசெய்தன.

இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கான புதிய கொடுகடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்த் தாக்கமானது எதிர்வரும் காலங்களில் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பன மீது தீவிரமான அழுத்தத்தினைத் தோற்றுவிக்கலாம். இப்பின்னணியில், பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ் புதிய கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 யூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நியதி ஒதுக்கு விகிதத்தின் இக்குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும்.
 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 மே

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 மேயில் 49.3 சுட்டெண் புள்ளிகளினை அடைந்து ஒரு குறிப்பிடத்தக்களவு எழுச்சியினை பதிவு செய்ததுடன் இது 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து காலத்திற்குமான தாழ்ந்த 24.2 சுட்டெண் புள்ளியிலிருந்து 25.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட ஒரு அதிகரிப்பாகும். தயாரிப்பு துறையின் பொருளாதார நடவடிக்கைகளின் ஆரம்பத்திற்கு இடநகர்விற்கான தடைகளின் படிப்படியான இலகுபடுத்தல்கள் பங்களிப்புச் செய்தன. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களினால் விடுக்கப்படும் அறிக்கை

இலங்கையின் நிதியியல் முறைமையும் நிதியியல் நிறுவனங்களும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றன என்றும் அத்தகைய நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட தமது வைப்புக்களை பொதுமக்கள் இழக்கும் இடர்நேர்வில் காணப்படுகின்றனர் என்றும் பல்வேறு குழுக்களினாலும் தனிப்பட்டவர்களினாலும் ஆதாரமற்ற ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் பொதுமக்களின் வைப்புக்களை ஏற்கின்ற வங்கித்தொழில் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இரண்டினதும் ஒழுங்குமுறைப்படுத்துநராக இலங்கை மத்திய வங்கியானது, பொதுமக்களின் வைப்புக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அனைத்து சாதகமான வழிமுறைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் என்பதனை பொதுமக்களுக்கு உறுதியாக அறிவிக்க விரும்புகின்றது. நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உறுதிப்பாடு தொடர்பிலான உண்மையான நிலைமைகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக நான் இவ்வறிக்கையினை விடுக்க விரும்புகின்றேன்.

Pages