இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுக்கையேடாகிய “ இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” தற்போது பொதுமக்களின் தகவலுக்காக கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவுக்கையேடு தொடரின் 44வது தொகுதியாகும்.
இக் கையேடானது 14 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதாரக் குறிக்காட்டிகள், நாட்டின் ஒப்பீடுகள், சமூக பொருளாதார நிலைமைகள், மனித வளங்கள், தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள் மற்றும் கூலிகள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, வெளிநாட்டு நிதி, அரச நிதி அத்துடன் பணம், வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களைக் உள்ளடக்கியுள்ளது. இக் கையேடானது, நடைமுறைத் தகவல்களின் சமூகப் பொருளாதார தரவுகளின் பரந்தளவிலான தரவுகளை சுருக்கமான வடிவத்தில் வழங்குவதால், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயன்மிக்க உசாத்துணை மூலமாக அமையும்.















இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.