நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறையொன்றாக சிறிய மற்றும் நடுத்தர வணிகர்கள் அதேபோன்று நுகர்வோர் மத்தியில் LANKAQR கொடுப்பனவுகளை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் LANKAQR தேசியளவில் பிரபல்யப்படுத்தும் பிரச்சாரம் இலங்கை மத்திய வங்கியில் 2021 ஒத்தோபர் 25 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக் ஷ (பிரதம அதிதி), நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள்; மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கௌரவ காஞ்சனா விஜேசேகர, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலையங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.வீ சானக ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. பல்வேறு அரசாங்கத் திணைக்களங்களின் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் பிரதானிகளும் அதேபோன்று சில்லறை, சுகாதார மற்றும் ஊடகத் தொழில்துறைகளின் தலைவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.