Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2021 ஒத்தோபர் 13ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 5.00 சதவீதம் 6.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. பொருத்தமான வழிமுறைகளுடன் நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை எதிர்வரவுள்ள காலத்தில் பொருளாதாரம் அதன் வாய்ப்பினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிப்பதற்கான அதன் கடப்பாட்டினை சபை மீளவும் வலியுறுத்தியது.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - நிபந்தனையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட நோக்கமொன்றுக்காக வியாபாரத்தினை மீள ஆரம்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) “வங்கியல்லா நிதியியல் துறையின் ஒருங்கிணைப்பிற்கான பிரதான திட்டத்தினுள்” ஒன்றினுள் கம்பனியினை இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாட்டினைக் கண்டறியும் நோக்கத்திற்காக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31(5)(அ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2021.10.13 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் வரையறுக்கப்பட்ட ஆறு (06) மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்கு தொழிலை மீளத் தொடங்குவதற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினை அனுமதிக்கின்ற கட்டளையொன்றினைப் பிறப்பித்துள்ளது.

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் விவகாரங்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்கும் மேற்குறித்த செயன்முறையினை தொடங்கி வசதிப்படுத்துவதற்கும் நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்திற்கு (குழாம்) அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதேவேளை சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பணிப்பாளர்கள், வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளரினால் அத்துடன்/அல்லது குழாத்தினால் அதிகாரமளிக்கப்படவுள்ள தொழிற்பாடுகளை மாத்திரம் கொண்டுநடாத்துதல் வேண்டும்.

2022இல் முதிர்ச்சியடைகின்ற இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் விலைக் கழிவுகளில் கோரப்பட்ட போதிலும் கொள்வனவுக்காக போதியளவில் கிடைக்கப்பெறவில்லை

இலங்கை மத்திய வங்கியினால் 2021.10.01 அன்று முன்வைக்கப்பட்ட “பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத வழிகாட்டல்” இன் பிரகாரம் நாட்டிற்கான பன்னாட்டு முறி முதலீட்டுத் தொகையானது அடுத்துவருகின்ற மூன்று வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏறத்தாழ 10 சதவீதத்திற்குப் படிப்படியாகக் குறைக்கப்படவுள்ளது.  இக்குறிக்கோளுக்கமைவாக, 2021 செத்தெம்பர் காலப்பகுதியில் எதிர்வருகின்ற 2022 இன் சனவரி மற்றும் யூலை நாட்டிற்கான பன்னாட்டு முறி முதிர்ச்சிகளின் வர்த்தகப்படுத்தலில் கழிவுசெய்யப்பட்ட விலைகளை அவதானத்திற்கொண்டு, பல எண்ணிக்கையான பன்னாட்டு வங்கிகளுடனும் முதலீட்டு வங்கிகளுடனுமான ஆலோசனையுடன் மீள்கொள்வனவு நடைமுறையொன்றினை நிறைவேற்றும் சாத்தியப்பாட்டினை மத்திய வங்கி கண்டறிந்தது.

வெளிநாட்டு பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு "SL-Remit" மொபைல் செயலியினை நடைமுறைப்படுத்தல்

வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய,  குறைந்த செலவு பணவனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வுசெய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பதன் மீது பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி பணியாற்றுக் குழுவொன்றினை நியமித்தது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம்பெற்ற தொழில்சார் நிபுணர்களை இப்பணியாற்றுக் குழு உள்ளடக்குகின்றது.

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்கு இலங்கை மத்திய வங்கி இணை அனுசரணை வழங்கியது

இலங்கை மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழி பேரண்ட பொருளாதார மாநாட்டிற்குத் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 செத்தெம்பர் 30ஆம் திகதி அன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருள் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள் என்பதாகும்.

‘A Step by Step Guide to Doing Business in Sri Lanka’ நூல் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ‘இலங்கையில் வியாபாரம்; செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்’ நூலின் ஒன்பதாவது தொடர் பதிப்பு தற்பொழுது பொதுமக்களுக்காக ஆங்கில மொழியில் கிடைக்கப்பெறுகின்றது. வியாபாரச் சமூகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்குகின்ற இந்நூல் அத்தகைய தகவல்களை பெற்றுக்கொள்வதில்  அவர்களின் நேரத்தையும் செலவையும்  மீதப்படுத்த வசதியளிக்கின்றது. இலங்கையில் தொழில்முயற்சியொன்றை தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றிற்கு ஏற்புடைய வலுவிலுள்ள அனைத்து ஒழுங்குவிதிகளையும் வாய்ப்புமிக்க தொழில்முயற்சியாளர்களுக்கு உபயோகமான ஏனைய தகவல்களையும்  தனியொரு மூலமாக   இக்கையேடு தன்னகத்தே கொண்டுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்