தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.















'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 