வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்தமை, அதிகரித்த சுற்றுலா வருவாய்கள், நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள் என்பனவற்றின் காரணமாக 2016 யூலையில் வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் மேம்பட்டது. வர்த்தகப் பற்றாக்குறை யூலையில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பு காரணமாக விளங்கியதுடன், இது ஏற்றுமதிகளில் ஏற்பட்ட குறைப்பினை விஞ்சிகக் hணப்பட்டது. சுற்றுலா வருவாய்கள் அதிகரித்த வேளையில், இம்மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவலுப்பல்கள் முன்னைய ஆண்டின் தொடர்ச்சியான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்தன. 10ஆவது நாட்டிறக்hன பன்னாட்டு முறிகளின் வழங்கலிருந்தான ஐ.அ.டொலர் 1500 மில்லியன் கொண்ட பெறுகைகள், கூட்டுக்கடன் வசதிகளிலிருந்தான ஐ.அ.டொலர் 300 மில்லியன், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பனவற்றில் பதிவுசெய்யப்பட்ட தேறிய உட்பாய்ச்சல்கள் என்பன நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களை பலப்படுத்தியமையின் காரணமாக சென்மதி நிலுவை மீதான அழுத்தம் தளர்வடைந்தது.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுபப்தற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 செத்தெம்பர் 27ஆம் நாளன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. எம்.என். ரணசிங்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 