வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட கொடுகடன் தொடர்பிலான சலுகைகள்

அண்மைய வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அதனுடன் இணைந்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் அவர்களின் வியாபாரங்களை மீளத்தொடங்குவதையும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் வசதிப்படுத்தும் நோக்குடன், உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் அத்தகைய பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது. 

இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள்;

  • அத்தகைய கடன்பெறுநர்களின் 25 மே 2017 இல் உள்ளவாறான அனைத்துச் செயற்படும் கொடுகடன் வசதிகளின் மீள்செலுத்துகை தொடர்பில் 3 மாதங்கள் வரையான சலுகைக் காலத்தை வழங்கவும்
  • இக்காலப்பகுதிக்கான தண்ட வட்டியை விலக்கவும் முடியும் 

இலங்கை மத்திய வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில், அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல கடன்பெறுநர்கள் இச்சலுகைத் திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதோடு இச்சலுகைகளைப் பெற்றிருக்கவுமில்லை. இதன்படி, அத்தகைய கடன்பெறுநர்கள் இது தொடர்பில் தமது வங்கிக் கிளைகளைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Published Date: 

Friday, August 11, 2017