Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

 பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரிஉண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 யூலை 06ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2017 யூலை 06ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில்பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாதகாலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

 இவ்வொழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை சந்தையின் மீது இடையூறுகளைக் கொண்டதாக்கமெதனையும் ஏற்படுத்தாதிருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கி அவசியமானவழிமுறைகளை எடுக்கும். பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வாடிக்கையாளர்களினதும் இணைத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் கையாள்வதனைவசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வங்கிகள் பாசல் III மூலதன நியமங்களைப் பின்பற்றுகின்றன.

2017 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வங்கிகள் 2016இன் பிற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட பணிப்புரையினை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச மூலதன நியமங்களைப் பின்பற்றும். இப்பணிப்புரையானது வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில்  பன்னாட்டுத் தீர்ப்பனவுகளுக்கான வங்கியினால் விடுக்கப்பட்ட மூலதனம், முடுக்கி மற்றும் திரவத்தன்மை தொடர்பான பாசல் III வழிகாட்டல்களுடன் இசைந்ததாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகத்தின் தொழிற்பாடுகளை கிளிநொச்சியிலுள்ள பிரதேச அலுவலகத்துடன் ஒன்றிணைத்தல்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை  மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 04 - 2017

தற்பொழுது நிலவுகின்ற மற்றும் தோற்றம் பெறும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்ட பொருளாதாரச் சூழல்களைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை 2017 யூன் 22ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதெனவும் தீர்மானித்தது.

நாணயச் சபையின் தீர்மானமானது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதிப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த நியாயப்பாடு கீழே வழங்கப்படுகின்றது.

 

 

2017 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பிற்கு மத்தியிலும் தளத்தாக்கமே முக்கிய காரணமாக விளங்கியது. 2017 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட 6.0 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

இலங்கை மத்திய வங்கி வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் தொடர்பில் அதன் நிலையினைத் தெளிவுபடுத்துகிறது

இலங்கை மத்திய வங்கி, அதன் தூய நாணத் தாள் கொள்கையினை நடைமுறைக்கிடுவது தொடர்பில் அதனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றமை பற்றி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. தூயநாணயத் தாள் கொள்கையானது, நாணயத் தாள்களின் தர நியமங்களைப் பேணுவதனையும் அதன் மூலம் உண்மையான தாள்களுக்கும் போலித் தாள்களுக்குமிடையிலான வேறுபாட்டினைக் கண்டறிய உதவுவதனையும் நோக்கமாகக் கொண்டதாகும். இக்கொள்கையினூடாக நாட்டின் நன்மதிப்பினை உயர்த்துவதற்கும் வினைத்திறனை மேம்படுத்தி நாணயத் தாள் செயன்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகளைச் சிக்கனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Pages

சந்தை அறிவிப்புகள்