பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடரும் பொருட்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச்சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, 2018 சனவரி 04ஆம் நாளன்று பெர்பெட்சுவல் ட்ரெசறீஸ் லிமிட்டெட்டினை முதனிலை வணிகர் வியாபாரத்தினையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்துவதனை 2018 சனவரி 05ஆம் நாள் பி.ப. 04.30 மணியளவிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

Published Date: 

Friday, January 5, 2018