2024ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க வங்கிகளினால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டத்தின் மீதான தொழிற்பாட்டுக் குழுவின் கூட்டத்தின்போது சிறிலங்கா பாங்க்ஸ் அசோசியேசன் (கறன்டி) லிமிடெட்டினால் இணங்கப்பட்டவாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அண்மைக் காலத்தில் நிலவிய விதிவிலக்கான பேரண்டப் பொருளாதார நிலைமைகள் என்பன காரணமாக பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண வழிமுறைகளை எடுத்துக்காட்டுக்கின்ற சுற்றறிக்கை அறிக்கையொன்றினை இலங்கை மத்திய வங்கி 2024.12.19 அன்று உரிமம்பெற்ற வங்கிகளுக்கு விடுத்திருக்கிறது.