பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கீதா கோபிநாத் 2025 யூன் 15-16 வரை இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் பணியிலுள்ள முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் 2005இன் பின்னர் இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்வதனால் இவ்விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. முனைவர் கோபிநாத், இவ்விஜயத்தின் போது 2025 யூன் 16 அன்று இடம்பெறவுள்ள நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பன இணைந்து நடாத்தும் “மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை” பற்றிய மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார். பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படுகின்ற மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் இடைநடுவில் இடம்பெறும் இம்மாநாடானது பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீள்நிறுத்தல், படுகடன் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஆளுகை மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்துக்காட்டுவதையும் வரவிருக்கும் சவால்கள் மீது கவனம் செலுத்துவதையும் நோக்காகக் கொள்கின்றது. இதற்கு மேலதிகமாக, பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கையுடனான பன்னாட்டு நாணய நிதியத்தின் ஈடுபாடு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடனும் பல முக்கிய பங்குதாரர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

Published Date: 

Tuesday, June 10, 2025