Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2018 திசெம்பர்

தயாரிப்பு நடவடிக்கைகள் நவெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திசெம்பர் மாதத்தில் ஒரு மெதுவான வீதத்தில் அதிகரித்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த நடவடிக்கைகளின் தொழில்நிலை மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக உந்தப்பட்டது. சில தொழிலாளர்கள் சிறப்பான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பருவகால தொழில்களை நோக்கிச் சென்றிருந்த காரணத்தினால் தொழில்நிலையில் ஒரு குறிப்பிடத்தக்களவு சரிவு உணரப்பட்டது. இது குறைவடைந்திருந்த உற்பத்தியினை பகுதியளவில் பாதித்திருந்தது. எவ்வாறாயினும், உணவு மற்றும் குடிபான உற்பத்திகளின் நடவடிக்கையில் தொடர்ச்சியான பண்டிகைப் பருவகாலக் கேள்வியின் பிரதானமான உந்தலினால் புதிய கட்டளைகள் அதிகரித்திருந்தது.

இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோருடனான சந்திப்பு தொடர்பில் பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டின் லாகார்டே அவர்களின் அறிக்கை

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டீன் லாகார்டே இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரை இன்று சந்தித்தார்.

சந்திப்பின் பின்னர் திருமதி லாகார்டே பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்:

“அமைச்சர் சமரவீர மற்றும் ஆளுநர் குமாரசுவாமி ஆகியோரை இன்று பகல் சந்தித்தையிட்டு நான் மிகழ்ச்சியடைகிறேன். சவால்மிகுந்த பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் நாட்டுக்கான கொள்கை முன்னுரிமைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடினோம். பன்னாட்டு நாணய நிதியத்தினால் உதவி வழங்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

“நிகழ்ச்சிநிரலை காத்திரமாக நடைமுறைப்படுத்துவதுடன் கூடிய உறுதியான கொள்கைக் கலப்பானது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்ற அதேவேளை அதன் மக்களுக்குப் பயனளிக்கும் நிலைபெறத்தக்க, உயர்வான வளர்ச்சிப் பாதையில் இலங்கையினை நிலைநிறுத்துவதற்கு முக்கியமானதாக விளங்குகிறது. 

“இம்முயற்சிகள் சம்பந்தமாக இலங்கை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியம் தயாராகவிருப்பதுடன், பெப்புருவரி மாத நடுப்பகுதியில் நிகழ்ச்சிதிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக பன்னாட்டு நாணய நிதியக் குழுவொன்று கொழும்பு வரவுள்ளது.”

ஒதுக்குகளை உயர்த்துவதற்காக ஐ.அ.டொலர் 400 மில்லியன் பரஸ்பரபரிமாற்றலை வழங்க இந்திய றிசேர்வ் வங்கி உடன்பட்டிருக்கிறது

சார்க் பரஸ்பரபரிமாற்றல் வசதியின் கீழ் இலங்கை மத்திய வங்கிக்கு ஐ.அ.டொலர் 400 மில்லியனை வழங்குவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி உடன்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கிக்கும் இந்திய றிசேர்வ் வங்கிக்குமிடையிலான ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட இருபுடை பரஸ்பரபரிமாற்றல் ஒழுங்குசெய்வதற்கான கோரிக்கையொன்றினை இலங்கை மத்திய வங்கி விடுத்திருக்கிறது. இது பரிசீலனையின் கீழ் இருந்து வருகிறது.

இலங்கைக்குப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகளைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதன் மூலம் முதலீட்டாளர் நம்பிக்கையினை உத்வேகப்படுத்துவதற்கு இந்திய றிசேர்வ் வங்கி விரைந்து உரிய நேரத்தில் உதவுகின்ற அதேவேளையில் இறக்குமதிகள், படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் போன்ற வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் அவசியமானவிடத்து ஒழுங்குமுறையற்ற சீராக்கங்களைத் தவிர்ப்பதற்கு நாணயத்திற்கான ஆதரவு போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வினை அடிப்படையாகக்கொண்ட மேற்பார்வைக்காக நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுகின்றனர்

காத்திரமான ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு அடிப்படையிலான மேற்பார்வையினை நடாத்துவதற்கும் இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தலைமை மேற்பார்வையாளராக செயற்படுவதற்கும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என்பவற்றுடன் இலங்கை மத்திய வங்கி 2018 திசெம்பர் 31 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி தொழிற்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2019 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

வழிகாட்டல் 2019: 2019 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

எமது கொள்கை நிலையினை விளக்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் பொருளாதாரம் தொடர்பான எமது மதிப்பீடுகளை வழங்குவதற்கும் நான் இவ்வுரையினை தொடங்குகின்றேன். 2018இல் இலங்கையின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரம், நிதியியல் மற்றும் வெளிநாட்டுத் துறையினை மோசமாகப் பாதித்த புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகள் என்பனவற்றிலிருந்து முக்கியமாகத் தோன்றிய அதிகளவான சவால்களையும் எதிர்நோக்கியது.பல உள்நாட்டுச் சவால்களும் காணப்பட்டன.நிச்சயமற்ற அரசியல் நிலைமைகள் குறிப்பாக, ஆண்டின் இறுதிக் காலாண்டுப் பகுதியில் ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கான சவால்களை அதிகரித்தன. 2017இன் குறைவடைந்த வளர்ச்சியைத் தொடர்ந்து 2018இலும் குறைவான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது. சாதகமான வானிலை நிலைமைகள் வேளாண்மைத் துறையின் மீளெழுச்சிக்கு ஆதரவளித்த வேளையில் பணிகள் நடவடிக்கைகளின் விரிவாக்கம் பரந்த அடிப்படையினைக் கொண்டிருந்தது. 

Pages