2020 யூன் 10ஆம் திகதியுடன் முடிவடைந்த இவ்வார காலப்பகுதியில் ரூ.6,978 மில்லியன் தொகை கொண்ட 2,066 புதிய கடன்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலுடன் 2020 யூலை 10ஆம் நாள் உள்ளவாறு இலங்கை மத்திய வங்கி சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிர்ப்பு வசதியின் கீழ் ரூ.60,250 மில்லியன் கொண்ட 22,306 கடன்களுக்கு ஒப்புதலளித்தது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூலை 09ஆம் நாள் உள்ளவாறு நாடளாவிய ரீதியில் 13,333 கடன்பாட்டாளர்களிடையே ரூ.30,526 மில்லியன்களைப் பகிர்ந்தளித்துள்ளன.
















