Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் வங்கித்தொழில் பணிகளை வழங்குதல்

இலங்கை மத்திய வங்கி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் மா அதிபரின் அனுமதியைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடித்து கொவிட் -19 நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணக் கட்டுப்பாடுகளுக்கமைவாக  அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) ஏற்கனவே வேண்டிக்கொண்டுள்ளது.

கொவிட் - 19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் வங்கித்தொழில் பணிகளை வழங்குவது குறித்து உரிமம்பெற்ற வங்கிகளால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்புகளை/ அறிவிப்புக்களைக் கவனித்து இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகின்றது.

முழுவடிவம்

தனியார் துறையின் மூலம் கரைகடந்த கடன்பாடுகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள்

நாட்டிற்கு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது கௌரவ நிதி அமைச்சரின் சம்மதத்துடனும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் தனியார் துறையின் வலிமைகள் மீது உந்துசக்தியளிக்கின்ற கரைகடந்த நிதியளித்தலை திரட்டுவதற்கான வழிகளைப் பின்பற்றுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றது.

இது தொடர்பில், கரைகடந்த கடன்பாடுகள் பற்றிய வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுக்கு காப்பளிப்பதற்கு வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படக்கூடிய சொல்லப்பட்ட கடன்பாடுகளின் காலப்பகுதிக்காக தனியார் துறையினரின் வெளிநாட்டுச் செலாவணி கடன்பெறுநர்களுக்காக செலவில்லாத பரஸ்பரப் பரிமாற்றல் ஒப்பந்த வசதியொன்று இலங்கை மத்திய வங்கி மூலம் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.

கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகைத் திட்டம்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் (உரிமம்பெற்ற வங்கிகள்) கோரியுள்ளது:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஏப்பிறலின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 9.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயில் 3.9 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஏப்பிறலில் அதிகரித்தது

 தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 மாச்சின் 5.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 ஏப்பிறலில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலில் 5.3 சதவீதத்தில் மாற்றமின்றி காணப்பட்டது.

பயணத்தடைகள் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களமானது தொலைதூர மற்றும் பிரதேசப் பணிகளை வழங்குகிறது

நாட்டினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிகளை தபாலில், மின்னஞ்சலில், இணையத்தில் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக் கிளையொன்றின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்