Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2023 யூன்

கட்டடவாக்கத் தொழிற்துறையின் அபிவிருத்திகளை உரிய காலத்தில் எடுத்துக்காட்டும் நோக்குடன் 2017 யூனில் கட்டடவாக்க நடவடிக்கைகளுக்காக கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டை இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தொடங்கியது. இவ்வளவீட்டினைத் திணைக்களம் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தும் முன்னெடுத்து,  இலங்கை மத்திய வங்கிக்கு முக்கிய தொழிற்துறை விடயங்களை வழங்கி,  கொள்கை வகுப்பு செயன்முறைக்கு உதவியளித்தது. தற்போது தயாரித்தல் மற்றும் பணிகள் என்பவற்றுக்கான வேறு இரண்டு கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் அளவீடுகளை வங்கி மாதாந்த அடிப்படையில் வங்கியின் வெப்தளத்தில் வெளியிடுகின்றது. ஆகையினால், 2023 யூன் அளவீட்டுச் சுற்றிலிருந்து தொடங்கி பொதுமக்களின் தகவல்களுக்காக கட்டடவாக்க கொள்வனவு முகாமையாளர்கள் சுட்டெண் அளவீட்டுப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

2023 யூனுக்கான கட்டடவாக்கக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீட்டுப் பெறுபேறுகள் மீதான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. அளவீட்டுப் பெறுபேறுகள் இதன் பின்னர் தொடர்ந்து வருகின்ற மாதத்தின் இறுதியில் ஊடக அறிக்கைகள் வாயிலாக மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டு புள்ளிவிபர பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திற்கு பதிவேற்றம் செய்யப்படும்.

கனடாவின் வன்குவர் நகரில் 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை இடம்பெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழும வருடாந்த முழுநிறைவு கூட்டத்தொடரில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்/தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். நந்தலால் வீரசிங்க பங்கேற்றார்

பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தளிதலை ஒழித்தல் தொடர்பான தேசிய ஒருங்கிணைப்புக்  குழுவின் தலைவர் என்ற ரீதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க, 2023 யூலை 11 தொடக்கம் 14 வரை கனடாவிலுள்ள வன்குவர் என்ற இடத்தில் இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டிற்கான முழுநிறைவு கூட்டத்தொடரிலும்  அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி மன்றத்திலும் கலந்துகொண்டு இலங்கையின் பேராளர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, நேபாளம் மற்றும் புருணை ஆகிய நாடுகளின் உரிய பரஸ்பர மதிப்பீடுகளில் பங்கேற்கின்ற நிபுணத்துவ மதிப்பீட்டாளர்களை இலங்கை பேராளர் குழு உள்ளடக்கியிருந்தது.

வெளிநாட்டுச் செலாவணி வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட சில வரையறைகளை/இடைநிறுத்தல்களை தளர்த்தி வழங்கப்பட்ட புதிய கட்டளை

செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணிக்காப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு உதவியளித்து பேணும் நோக்குடன் கௌரவ நிதி அமைச்சர் சில வெளிமுகப் பணவனுப்பல்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு/மட்டுப்படுத்துதவற்கு 2020.04.02ஆம் திகதி தொடக்கம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் (வெளிநாட்டு செலாவணிச் சட்டம்) 22ஆம் பிரிவின் கீழ் கட்டளைகளை வழங்கியுள்ளார். 

உள்நாட்டு, வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் தற்போதைய அத்துடன் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டும், சர்வதேச கொடுக்கல்வாங்கல்களை மேலும் வசதிப்படுத்தும் நோக்குடனும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதி அமைச்சர் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றினை வழங்கியுள்ளார். இக்கட்டளையானது மூலதனக் கொடுக்கல்வாங்கல்களுக்கான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான சில வரையறைகளை தளர்த்தியுள்ளதுடன் புலம்பெயர்ந்தவர்களின் நடைமுறை மாற்றல்கள் மீதான மட்டுப்பாடுகளை அகற்றியுள்ள அதேவேளை முன்னைய கட்டளையின் கீழ் விதிக்கப்பட்டிருந்த வேறு இடைநிறுத்தல்கள்/ வரையறைகள் தொடர்ந்தும் அமுலிலிருக்கும். புதிய கட்டளையானது 2023.06.28 தொடக்கம் ஆறு (06) மாதங்களுக்கு வலுவிலிருக்கும். அவ்வாறு தளர்த்தப்பட்ட இடைநிறுத்தல்களின்/வரையறைகளின் தொகுப்பு கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான பணம் தூயதாக்கலுக்கெதிரான இணங்குவித்தல் தேவைப்பாடுகள்

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவானது “பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் இணங்குவிப்பு கடப்பாடுகள் மற்றும் புதிய அபிவிருத்திகள்” பற்றி 2023 யூலை 04 அன்று இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுசெய்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும்ஃபணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமை உரையினை நிகழ்த்தியதுடன் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திரு. விராஜ் த சில்வா, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அமைப்பின் தலைவர் திரு. அஜ்வாதீன் மற்றும் இலங்கை இரத்தினக்கல் வணிகர்கள் மற்றும் அகழ்வோர் அமைப்பின் தலைவர் யு. ஜி. சந்திரசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தொழிற்துறையைச் சேர்ந்த 100இற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 யூன்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 யூனில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலொன்றையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கமொன்றையும் எடுத்துக்காட்டின.  

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 யூனில் 47.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் பின்னடைவை எடுத்துக்காட்டியது. அனைத்துத் துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 யூனில் மேலும் அதிகரித்து, 2022 சனவரி தொடக்கம் அதிகூடிய வாசிப்பான 56.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் குறைவடைந்த அதேவேளை தொழில்நிலை மாற்றமடையாதிருந்தது.

இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் பற்றிய தகவல் ஏட்டை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் “இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்” என்ற தலைப்பில் தகவல் ஏடொன்றினை மத்திய வங்கி மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பரந்தளவிலான தொடர்பூட்டல் உபாயத்தின் பாகமொன்றாக இவ்வெளியீடு, நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் பற்றிய தொழில்நுட்ப நோக்குகள் மீது எளிமையான கலந்துரையாடலை எடுத்துரைத்து பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிப்பட்டவர்களும் அதனைப் பெற்றுக்கொள்வதை இயலச்செய்து, நாணயக் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், நாணயச் சாதனங்கள் மற்றும் ஊடுகடத்தல் பொறிமுறை பற்றிய பெறுமதிமிக்க உள்நோக்குகளை வழங்குகின்ற அதேவேளை பொதுமக்கள் மத்தியில் நாணயத் தொழிற்பாடுகள் மீதான ஏதேனும் தவறான எண்ணப்பாங்குகளை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்றது.   

Pages

சந்தை அறிவிப்புகள்