Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 மாச்சில் மேலும் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 பெப்புருவரியின் 50.6 சதவீதத்திலிருந்து 2023 மாச்சில் 50.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, 2023இல் பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வேகக்குறைவுப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 பெப்புருவரி

2023 பெப்புருவரியில் ஏற்றுமதி வருவாய்களில் ஏற்பட்ட குறைப்புடன் (ஆண்டிற்காண்டு) ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினமானது குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து, வர்த்தகப் பற்றாக்குறையில் கணிசமானளவிலான மிதமடைதலொன்றினைத் தோற்றுவித்தது. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 பெப்புருவரியில் தொடர்ந்தும் மேம்பட்டன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் அண்மைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 பெப்புருவரி இறுதியளவில் மேலும் வலுவடைந்தன.

செலாவணி வீத நிர்ணயித்தலில் அனுமதிக்கப்பட்ட கணிசமான நெகிழ்ச்சித்தன்மையினைத் தொடர்ந்து செலாவணி வீதமானது 2023 மாச்சில் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்து காணப்பட்டது.

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன 2023 பெப்புருவரி காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

ஐ.அ.டொலர் 3 பில்லியன் தொகையிலான பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தான நீடிக்கப்பட்ட நிதிய வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்டதுடன் இதன் முதலாம் தொகுதி 2023 மாச்சில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

2023.03.30 அன்று முதலீட்டாளர்களுக்கான மெய்நிகர் எடுத்துரைப்பின் பின்னர் ஆளுநரும் திறைசேரிக்கான செயலாளரும் விடுக்கும் அறிக்கை

2023 மாச்சு 20 அன்று, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தும் வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் ஐ.அ.டொலர் 7 பில்லியன் நிதியிடலுக்கு வழியமைத்து பன்னாட்டு நாணய நிதியச் சபை இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமானது கொள்கை நடைமுறைப்படுத்தல் நியதிகளில் தெளிவான வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சாத்தியமான அதன் வளர்ச்சியினை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதையும் இயலச்செய்கின்றது.

இலங்கையில் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமை பற்றி விளக்கமளிப்பதற்கும், பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய தூண்கள் அத்துடன் குறிக்கோள்கள் பற்றியும் அதேபோன்று கடன்கொடுநர்களுடன் ஈடுபடுவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் நாம் இன்று முதலீட்டாளர் எடுத்துரைப்பொன்றினை நடாத்தினோம். 

மறைக்குறி நாணயத்தைப் (Cryptocurrency) பயன்படுத்துவதிலும் முதலீடுசெய்வதிலுமுள்ள இடர்நேர்வுகள்

“கிறிப்டோ” என பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினாலன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். ‘கிறிப்டோ நாணயம்’ என்ற சொற்பதமானது மறைகுறியாக்கம் மற்றும் பகிரப்பட்ட பேரட்டு தொழில்நுட்பம் அல்லது அதையொத்த தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்ற டிஜிட்டல் பெறுமதியின் பிரதிநிதித்துவத்தைக் குறிப்பிடுகின்றது. கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழ் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்குப் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளிக்கின்றது

இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மறுசீரமைப்புக்களுக்கும் ஆதரவளிக்கும் பொருட்டு  சி.எ.உ 2.286 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3 பில்லியன்) கொண்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் 48 மாதங்கள் நீடிக்கப்பட்ட ஏற்பாடொன்றிற்கு பன்னாட்டு நாணய நிதிய சபை ஒப்புதலளித்தது.

பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினையும் மீட்டெடுத்தல், நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வருவதற்கான கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை விரைவுபடுத்தல் என்பன விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட செயற்றிட்டத்தின் நோக்கங்களாகும். அனைத்து செயற்றிட்ட வழிமுறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆளகையினை மேம்படுத்துகின்றதன் அவசியத்தினைக் கவனத்திற்கொண்டுள்ளன.

செயற்றிட்ட சுட்டளவுகளுக்கு இணங்க படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுக்கும் படுகடன் முகாமைத்துவமொன்றினைத் துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கும் அதன் சகல கொடுகடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பானது இன்றியமையானதாகும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2023 பெப்புருவரி

தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்,  பெப்புருவரியில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் 42.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. புதிய கட்டளைகள், உற்பத்தி, தொழில்நிலை  மற்றும்  கொள்வனவுகளின் இருப்பு என்பவற்றில் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றுகையினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது

Pages

சந்தை அறிவிப்புகள்