இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் “இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்” என்ற தலைப்பில் தகவல் ஏடொன்றினை மத்திய வங்கி மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பரந்தளவிலான தொடர்பூட்டல் உபாயத்தின் பாகமொன்றாக இவ்வெளியீடு, நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் பற்றிய தொழில்நுட்ப நோக்குகள் மீது எளிமையான கலந்துரையாடலை எடுத்துரைத்து பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிப்பட்டவர்களும் அதனைப் பெற்றுக்கொள்வதை இயலச்செய்து, நாணயக் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், நாணயச் சாதனங்கள் மற்றும் ஊடுகடத்தல் பொறிமுறை பற்றிய பெறுமதிமிக்க உள்நோக்குகளை வழங்குகின்ற அதேவேளை பொதுமக்கள் மத்தியில் நாணயத் தொழிற்பாடுகள் மீதான ஏதேனும் தவறான எண்ணப்பாங்குகளை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்றது.