Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கை

நாணயச் சபை, 2016 ஒத்தோபர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2016 மாச்சு 31இல் முடிவடைந்த ஆண்டுப் பகுதியிலும் அதேபோன்று 2016 ஓகத்து 31இல் முடிவடைந்த ஐந்து மாத காலப்பகுதியிலும் முதனிலை வணிகர்களின் நிதியியல் செயலாற்றம்  உள்ளிட்ட தொழிற்பாடு மீதான இடைக்கால அறிக்கையினைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டது. முதனிலை வணிகர்களின் செயலாற்றத்திலும் அதேபோன்று வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளின் தன்மையுடன் தொடர்பான குறிப்பிட்ட விடயங்களிலும் கரிசனைக்குரிய பெருமளவு ஒவ்வாத தன்மைகள் கவனிக்கப்பட்டுள்ளன. இது, தொடர்பில் தலத்திலான பரீட்சிப்பு அறிக்கைகள் தொடர்பாக தற்பொழுது இடம்பெற்றுவரும் தயாரிப்புச் செயன்முறையினை விரைவாக நிறைவு செய்யுமாறு நாணயச் சபை அறிவுறுத்தியிருக்கிறது. இது, எதிர்கால நடவடிக்கைகளின் மீது நாணயச் சபை நேரகாலத்துடன் தீர்மானமொன்றினை மேற்கொள்வதனை இயலச்செய்யும். 

அண்மைய ஊடக அறிக்கைகள் தொடர்பில் நாணயச் சபையின் அறிக்கை

அரச பிணையங்கள் சந்தையில் தொழிற்படுகின்ற முதனிலை வணிகர்களை ஒழுங்குமுறைப்படுத்துகின்றவர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பேர்பெச்சுவல் றெசறீஸ் லிமிடெட்டின் பரீட்சிப்புத் தொடர்பான அறிக்கை பற்றி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரந்தளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.  

இவ்வறிக்கையினை வெளியிடுவதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரமளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்குள்ளேயான இலங்கை மத்திய வங்கியின் உள்ளகச் செயன்முறைகள் நிறைவடைந்திருக்கவில்லை என்பதுடன் இறுதி அறிக்கையும் நாணயச் சபையின் பரிசீலனைக்காக இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. அங்கீகாரமளிக்கப்படாத இவ்வெளிப்படுத்துகைகளின் விளைவாக இலங்கை மத்திய வங்கி அதன் உள்ளகக் கட்டுப்பாட்டு பொறிமுறையினை வலுப்படுத்தியிருக்கின்றதுடன் இவ்வறிக்கையினை அதிகாரமளிக்கப்படாத முறையில் வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. 

இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுபப்தற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 செத்தெம்பர் 27ஆம் நாளன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. எம்.என். ரணசிங்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 செத்தெம்பர்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின்படி, 2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 2015இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதேவேளை 2016இன் முதற்காலாண்டின் வளர்ச்சி 5.2 சதவீதத்திற்குத் திருத்தப்பட்டது. 

2016இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில், பணிகளுடன் தொடர்பான நடவடிக்கைகள் 4.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த வேளையில், கைத்தொழில் தொடர்பான நடவடிக்கைகள் 2.2 சதவீதம் கொண்ட மிதமான விரிவாக்கத்தினைப் பதிவுசெய்தன. மோசமான வானிலை நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் 5.6 சதவீதம் கொண்ட சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தன. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மற்றும் வியாபார நம்பிக்கை என்பனவற்றின் இணைந்த தாக்கம் அதேபோன்று 2016இன் நான்காம் காலாண்டின் சாதகமான தளத்தாக்கம் என்பன ஆண்டின் பின்னரைப் பகுதியில் மீண்டும் வளர்ச்சி ஏற்படுவதற்குப் பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான ப.நா.நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது 2016 செத்தெம்பர் 23

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கை சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு (FIU - Sri Lanka) சிங்கப்பூரின் ஐயத்திற்குரிய கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் அலுவலகத்துடன் (STRO) இருவயினொத்த தன்மை, ஒத்துழைப்பு தாற்பரியம் மற்றும் பரஸ்பர ஈடுபாடு என்பனவற்றின் அடிப்படையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியிடல் தொடர்பான புலன்விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு வசதியளிக்கும் விதத்தில், ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சட்டவாக்கங்களின் கட்டமைப்பிற்குட்பட்டு 2016 செத்தெம்பர் 01ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை (MOU) மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது நிதியியல் உளவறிதல் பிரிவு - இலங்கையினால் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாட்டு நியதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்